எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை- சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குளம் ஊராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், முன்னிலை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். இம்முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் ஆய்வு செய்ததுடன் தொடர்புடைய அலுவலர்கள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் இச்சிறப்பு முகாமில் வேப்பங்குளம், குருந்தம்பட்டு, ஆலம்பட்;டு, கீழப்பூங்குடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இன்று பெறப்பட்ட மனுக்களில் சாலை வசதி, குடிநீர் வழங்குவதற்கு தேவையான பணிகள் நிறைவேற்றித் தர வேண்டியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், முதியோர் உதவித் தொகை மற்றும் தெருவிளக்கு அமைத்தல், பட்டா மாறுதல், பசுமை வீடு வேண்டுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 260 மனுக்கள் பெறப்பட்டதுடன் அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதுடன் அமைச்சர் பேசுகையில்,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியுடன் ஆட்சி புரியும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் நல்வழிகாட்டுதலுடன் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதனடிப்படையில் அரசின் திட்டங்கள் கிராமப் பகுதிகளிலுள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்த திட்;டமிட்டு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சியாக சென்று பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெற்று உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த வாரம் மக்களிடம் மனுக்கள் பெற்று தற்பொழுது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தொடர்ந்து இன்று வேப்பங்குளம் ஊராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுவது மட்டுமன்றி உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கல்லல் பெரியகோவில் தெப்பக்குளம் சீர் செய்யப்படும். அதேபோல் கல்லல் ஊராட்சியைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் இருப்பதால் பொதுமக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு கல்லலில் விரைவில் புதிய பேருந்து நிலையம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
பொதுவாக குறை தீர்க்கும் முகாமின் நோக்கம் அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதேயாகும். எனவே கட்சிப்பாகுபாடின்றி எந்த நேரம் வேண்டுமானலும் பொதுமக்கள் என்னை சந்தித்தோ அல்லது தொலைபேசி மூலம் தெரிவித்தாலும் தாங்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கேற்ப பொதுமக்களும் தங்கள் பகுதியில் நடைபெறும் இதுபோன்ற சிறப்பு முகாமில் பங்கேற்று தங்களுக்குரிய தேவைகள் மற்றும் ஊரின் வளர்ச்சி குறித்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பர்னாபாஸ், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் ஜெயகுணசீலன், முன்னாள் கல்லல் ஒன்றியக் குழுத்தலைவர் அசோகன், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் சசிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி
08 Jan 2026சிட்னி, ஆஷஸ் தொடரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
-
9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 6.5 கோடி பேரின் பெயர்கள் நீக்கம்..!
08 Jan 2026புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.


