எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.29 - இளைய சமூகத்தின் மத்தியில் விளையாட்டு துறையை மேம்படுத்த பல்நோக்கு நடவடிக்கைகளை எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா முதற்கட்டமாக திருச்சி, மதுரை உள்விளையாட்டு அரங்கை அமைக்க நிதியை ஒதுக்கியுள்ளார். மேலும் 20 மாவட்டங்களில் உள்விளையாட்டு அரங்குகளை அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா என்ற பாரதியின் கூற்றுப்படி, ஒவ்வொருவருக்கும் படிப்பும், விளையாட்டும் இரண்டு கண்களாகும். படிப்பு, அறிவை வளர்க்கும்; விளையாட்டு, உடல் நலத்தை காக்கும்; என்பதை உணர்ந்து கல்வி, விளையாட்டு என்ற இரண்டிலும் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதன் மூலம் அறிவார்ந்த ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாகும். இதன் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கல்வியைப் போல, விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில், கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்வாலியம் செயற்கை தகடுகளான மேற்கூரை வசதியுடன் கூடிய கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டு மைதானங்கள், 1 கோடியே 50 லட்சம் ரூபாயில், அதாவது ஒவ்வொரு இடத்திலும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், மதுரையில் பன்னாட்டு தரம் வாய்ந்த செயற்கை இழை ஹாக்கி மைதானம், நீர்தெளிப்பான், மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதியுடன் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகரில் தடகளப் போட்டியினை ஊக்குவிக்க, 8 ஓடுகளப் பாதைகளுடன் கூடிய செயற்கை இழையிலான தடகள ஒடுபாதை, மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதியுடன் 6 கோடி ரூபாயில் செலவில் உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
முதலமைச்சர் கோப்பைக்காக, மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடை பந்து, கால்பந்து, ஹாக்கி , கபாடி மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகள் 4 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
உலகத் திறனாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் 3,240 இளம் விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி வாகை சூட ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 6,000/ ரூபாய் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இத் திட்டத்திற்கு 1 கோடியே 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். தற்போது உலக அளவில் அனைத்து விளையாட்டுகளும், செயற்கை தளங்களில் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கிலும் நடைபெற்று வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு உலகத் தரம் வாய்ந்த செயற்கை தளங்கள் அமைக்க மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி, பல்வேறு இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணிக்காக முதற்கட்டமாக 8 வாகனங்களை 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்குவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
மாவட்டங்களில் பல்வேறு விளையாட்டுகளில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறனை வளர்பபதற்கு பல்நோக்கு வசதிகள் கொண்ட விளையாட்டு அரங்கங்களை அமைப்பது மிகவும் அவசியம். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 30 கோடி ரூபாய் செலவில் பார்வையாளர்களுக்கான இருக்கை வசதி, மரத்தாலான தரைத்தளம் மற்றும் மின்வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய உள் விளையாட்டு அரங்கங்களை 20 மாவட்டங்களில் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள். முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இவ்விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது 9 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகள் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விளையாட்டு விடுதி வீதம், 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகளை அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்கள். இதன்படி, ஒவ்வொரு விளையாட்டு விடுதியிலும் 60 மாணவ, மாணவியருக்கு உயர்தர பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் வழங்கப்படும். முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும். இதற்காக அரசுக்கு 3 கோடி ரூபாய் தொடரா செலவினமும், 1 கோடியே 15 லட்சம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும்.
மேற்கூறிய, அரசின் பல்நோக்கு நடவடிக்கைகளினால், தமிழகத்தில் விளையாட்டுத்துறை ஒரு புதிய சகாப்தம் படைக்கும் என்று சொன்னால் மிகையாகாது. இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
மகளிர் உலகக் கோப்பை: முதல் அணியாக வெளியேறியது வங்கதேசம்
21 Oct 2025மும்பை : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
-
இந்திய கேப்டன் வேதனை
21 Oct 2025மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார்.
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
ரிஸ்வான் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்
21 Oct 2025லாகூர் : ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷாகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
மகளிர் உலகக்கோப்பை 22வது லீக்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு
21 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
-
இந்தியா - தெ.ஆ. டெஸ்ட் போட்டி: குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60
21 Oct 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60 என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
திருவாரூரில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த இ.பி.எஸ்
22 Oct 2025திருவாரூர், திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Oct 2025சென்னை : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
22 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
22 Oct 2025கரூர் : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு: அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
22 Oct 2025சென்னை, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அனைத்து மாவட்டங்கள
-
போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
22 Oct 2025தஞ்சாவூர் : போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.