முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மின் விளக்கை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் அல்ல

தாமஸ் ஆல்வா எடிசன் மிகப் பெரிய விஞ்ஞானி என்பது நமக்கு தெரியும். அவர் கண்டுபிடித்தவற்றின் பட்டியல் மிக நீளமானது. அதிகாரப்பூர்வமாக 1093 கண்டுபிடிப்புகளுக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார். அவற்றில் ஒன்று மின் விளக்கு. ஆனால் பெரும்பாலான வரலாற்றாய்வாளர்களின் கருத்துபடி அவர் பெரும்பாலான பிறரால் கண்டுபிடிக்கப்பட்டவற்றை தன்னுடையது என காப்புரிமை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதில் மின் விளக்கம் அடங்கும். ஏனெனில் அவர் மின் விளக்கை கண்டுபிடிப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்து வானியல் மற்று ரசாயன விஞ்ஞானி வாரன் டி லா ரூ என்பவர் அதை கண்டுபிடித்து விட்டார் என்பதுதான் ருசிகரமான தகவலாகும்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ரூ.1.50 கோடி கட்டணம்

திருப்பதியில் தர்ம தரிசனம் தொடங்கி பல்வேறு தரிசன கட்டணங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிக வருவாய் கொண்ட கோயிலாகவும், அதிக பக்தர்கள் தரிசனம் செய்யும் கோயிலாகவும் திருப்பதி விளங்கி வருகிறது. அண்மையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய கட்டண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி நாள் முழுவதும் உதய-அஸ்தமன சேவையை தரிசனம் செய்ய ரூ.1.50 கோடி கட்டணம். அதாவது வெள்ளிக்கிழமைகளில் இந்த கட்டணமும், மற்ற நாட்களுக்கு ரூ.1 கோடியும் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் நாள் முழுவதும் உதய சேவை தோடங்கி அஸ்தமன சேவை மற்றும் இரவு கோயில் நடை சாத்தும் வரையில் அனைத்து வழிபாடுகளையும் பக்தர்கள் தரிசிக்க இந்த கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் அபிஷேகம் நடைபெறும் என்பதால் ரூ.1.50 கோடி. இந்த வசதியை பக்தர்கள் 25 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது ஒருமுறை கட்டணம் செலுத்தி விட்டு ஏதேனும் ஒரு நாளை தேர்வு செய்து கொண்டால், 25 ஆண்டுகளுக்கும் அந்த நாளின் முழு சேவை வழிபாட்டையும் பக்தர்கள் தரிசிக்கலாம் என்பது கோயில் நிர்வாகத்தின் ஏற்பாடு. இதற்காக முதல் கட்டமாக ஆன் லைனில் 531 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டு இரைப்பை கொண்ட விலங்கு எது தெரியுமா?

இரண்டு இரைப்பை கொண்ட விலங்கு எது தெரியுமா.. மனிதர்களுடன் மிகவும் நட்பாக பழகும் டால்பின்கள் தான். ஒன்று உணவை சேகரிக்கவும், ஒன்று செரிமானத்துக்கும் பயன்படுகிறது. டால்பின்கள் பிறந்த பிறகும் தங்களது தாய் விலங்குடன் நெருக்கமாகவே இருந்து வருபவை. சில 3 அல்லது 8 ஆண்டுகள் வரையிலும் கூட தாயுடனேயே சுற்றி தெரியும். டால்பின்களால் ஆயிரம் அடி வரையிலும் கூட தாவ முடியும். டால்பின்கள் சுமார் 50 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழக் கூடியவை. டால்பின்களில் மட்டும் 40க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

ஆண்களின் குணம்

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.

கயி்ற்றின் மீது நடப்பவர்கள்: ரஷ்யாவில் வினோத கிராமம்

நம்மூர்களில் திருவிழாக் காலங்களில் வித்தை காட்டும் கலைஞர்கள் தெருவில் இரு புறமும் கயிறை கட்டி கூத்தாடுவதை பார்த்திருக்கிறோம். அதையை சற்று உயரமாகவும், நீளமாகவும் மாற்றி வெளிநாடுகளில் சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அண்மையில் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் மீது கயிற்றை கட்டி அசால்ட்டாக நடந்து சென்று சாதனை செய்த வீடியோ நெட்டில் வைரலாக பரவியதை அனைவரும் பார்த்திருக்கலாம்.ஆனால் ஒரு கிராமமே கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா.. என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கிராமத்தில் முதியவர் தொடங்கி இளையவர் வரை, பெண்கள் தொடங்கி சிறுவர்கள் வரை அனைவரும் கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களாக அசத்து கின்றனர். இந்த வினோத கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா.. ரஷ்யாவில்.. பொதுவாகவே சர்க்கஸ் துறையில் ரஷ்யர்கள் தான் எப்போதும் முன்னிலையில் இருப்பவர்கள். கடந்த நூற்றாண்டில் சர்க்கஸ் தொழில் செழித்து கிடந்த கால கட்டத்தில் ரஷ்யர்கள் உலகம் முழுவதையும் வியாபித்திருந்தனர். தற்போது சர்ககஸ் தொழில் படிப்படியாக குறைந்து விட்டது.மக்களுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை. அது கிடக்கட்டும்.. கயிற்றின் நடக்கும் அந்த கிராமம் Russia’s Dagestan autonomous republic என்று சொல்லப்படும் பிராந்தியத்தில் உள்ள Tsovkra-1 என்ற சிறிய கிராமம் தான் அது. அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுமே கயிற்றில் நடக்கும் திறன் பெற்றவர்கள் என்பதாலேயே அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலத்தில் 3 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டிருந்த அந்த கிராமம் தற்போது 300 பேராக குறைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கயிற்றின் மேல் நடக்கும் மரபை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago