முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தீபாவளி ஓர் ஆச்சரியமான செய்தி

19 ஆம் நூற்றாண்டு வரை தமிழின் எந்த இலக்கிய ஆவணத்திலும் தீபாவளி என்ற சொல் கிடையாது. வட நாட்டில் இருந்தும், விஜயநகர பேரரசின் போதும் தமிழகத்துக்கு தீபாவளி வந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தீபாவளியை இந்துக்கள் தவிர சமணர்கள், புத்தர்கள் மற்றும் சில வெளிநாடுகளிலும் கொண்டாடுகின்றனர்.1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் - தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. பழங்காலத்தில் தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தீபாவளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். எது எப்படியோ இன்றைக்கு தீபாவளிக்கு புத்தாடை புனைந்து, பலகாரங்கள் செய்து, புதுப்படம் ரீலிஸ் செய்தால்தான் தமிழனின் தீபாவளி நிறைவு பெறும்.

புதிய உணவகம்

லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அன்பால் காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த உணவகத்தினை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டினை செய்து கொடுத்து வருகிறார்.

கரடிகளை காப்பாற்றிய நாய்க்கு சர்வதேச விருது

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயிலிருந்து 100 கோலா கரடிகளை மீட்க உதவிய துணிச்சலான நாய்க்கு சர்வதேச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ பரவியது. இதில் ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள் கருகியதுடன், பறவைகள், விலங்குகளும் பாதிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட அரிய வகை விலங்கான கோலா கரடிகளை மீட்கும் பணியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுடன் இணைந்து  பயிற்சி பெற்ற நாய் ஒன்றும் அவர்களுக்கு இணையாக தீரமாக போராடி உதவியது. பீர் (Bear) எனப் பெயரிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியன் கூலி இன நாய்தான் இந்த வீர சாகசத்துக்கு சொந்தக்காரி.  இதற்காக ஆஸ்திரேலியாவின் Sunshine Coast பகுதியில் அமைந்திருக்கும் University of the Sunshine Coast பல்கலை கழகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீர தீர சாகசத்தை புரிந்த பீருக்கு International Fund for Animal Welfare என்ற சர்வதேச விலங்குகள் தன்னார்வ அமைப்புதான் விருது வழங்கி கவுரவித்துள்ளது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்த நாய் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் ஷூ

டிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

பேச மட்டும் இல்ல

வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜை அனுப்பி விட்டால் அதனை டெலிட் செய்யவோ, எடிட் செய்யவோ முடியாது. இது குறித்த சோதனை முயற்சி ஐபோன்களில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் மாற்றப்பட்டுவிடும். டெலிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் அந்த மெசேஜ் டெலிட் ஆகிவிடும். விரைவில் வாட்ஸ்ஆப்பில் இந்த ஆப்ஷன்ஸ்கள் இணையும்.

தேனீக்கள் : ஒரு லிட்டில் ஸ்டோரி

ஓய்வில்லா உழைப்புக்கு மட்டுமல்ல சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கு தேனீயே அடையாளமாக இருக்கின்றது ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே சேமித்துக் கொள்கிறது. எனவே உணவுப் பதப்படுத்துவதில் முன்னோடியும் தேனீதான். தேனீக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  மொத்தம் 44 இனங்கள் உள்ளன. அறிவியலில் ஏப்பிடே (Apidae) எனும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) எனும் இனத்தைச் சார்ந்தவை தேனீக்கள். மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். தேனீக்களில் முதல் வகை இராணித் தேனீ. இதுதான் தேனீக்களில் மிகப் பெரியது. தலைமை வகிக்கும். இதன் ஆயுள் 3 ஆண்டுகள். இதன் வேலை இனப்பெருக்கம் செய்வது. 2 ஆவது ஆண் தேனீ. இதன் வேலை கூட்டை பராமரிப்பது, ராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. 3ஆவது வேலைக்காரத் தேனீ. ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்தையும் செய்யும். இதன் ஆயுள் 2 மாதங்கள். செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக் காலமாக தேனீக்கள் வேகமாக அழிந்து வருவது வேதனைக்குரியதுதானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago