முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செயலிகள் எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ள மொபைல் போன்கள் மூலம் ஒருவரின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என அமெரிக்காவின் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். எனவே ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும் முன் எச்சரிக்கையாக செயல்பட அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிபிசி தமிழோசை

76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி சேவையை நிறுத்துவதாக பிபிசி அறிவித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சருமம் பளபளக்க...

ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழங்கள் அல்லது ஆப்பிள் பழ த்தை குழைத்து பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து மெல்லிய காட்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும். இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ளநச்சுகள் நீங்கி சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும்.

கண்ணாடி பாதுகாப்பு

பெரும்பாலான ஏ.டி.எம் மெஷின்களில் திரைக்கு மேல் ஒரு வட்ட வடிவிலான கண்ணாடி ஒன்று இடம் பெற்றிருக்கும். அது பணம் எடுப்பவரின் உதவிக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும். அது அகலமாக பின்னாடி இருப்பதை உங்களுக்கு காட்டும் வகையில் இருக்கும்.இதன் மூலம், நீங்கள் ரகசிய குறியீடு எண் பதிவு செய்யும் போது யாராவது உங்களை பின்னாடி இருந்து வேவு பார்க்கிறார்களா, திருடர்கள் உள்ளே வருகிறார்களா? போன்றவற்றை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். 

தலையால் கூட்டின் கதவை அடைக்கும் வித்தியாச எறும்புகள்

எறும்புகள் ஒருவகையில் தேனீக்களைப் போன்றவை. தேனீக்களை போலவே ராணி, ஆண், வேலைக்கார எறும்புகள் போன்ற வகைகளில் இவற்றிலும் உண்டு. அதில் ஒரு சில இனங்களில் வித்தியாசமான எறும்புகள் உள்ளன. அவை தங்களது தலையால் கூட்டின் வாயிலை கதவு போல அடைத்துக் கொள்கின்றன. இதனால் இவற்றுக்கு கதவு தலை எறும்புகள் (door head ants) என்றே பெயர் கொண்டவை. இவற்றை தாண்டிதான் அன்னியர்கள் உள்ளே வர முடியும். பெரும்பாலும் அன்னியர்களுக்கு அனுமதி கிடையாது. தங்களது இனத்திலேயே கதவு தலை எறும்புகளின் அனுமதி கிடைத்தால் மட்டுமே கூட்டுக்குள் என்ட்ரியாக முடியும்.. எப்படி ஒரு அதிசயம் பாருங்கள்.

அன்னை தெரசா அணிந்திருந்த சேலைக்கு அறிவுசார் சொத்துரிமை உள்ளது தெரியுமா?

அல்பேனியாவில் பிறந்து கிறிஸ்துவத்தை பின்பற்றிய அன்னை தெரசா கொல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியை தொடங்கி ஏழைகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிறமும், ஓரத்தில் 3 நீல நிற கரையும் கொண்ட சேலை அவரது அடையாளமாகவே மாறின. பின்னர் அவரை பின்பற்றி அந்த சாரிட்டியில் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் கன்னியாஸ்திரிகளும் அந்த புடவையையே சீருடையாக ஏற்று அணிந்து வருகின்றனர். இந்த தனித்தன்மை வாய்ந்த  புடவையின் டிசைனை அன்னை தெரசா தான் உருவாக்கினார். தற்போது அதற்கு அறிவுசார் சொத்துரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதை யாரும் வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என அந்த அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. லாப நோக்கம் அற்ற பொது சேவைகளுக்கு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago