முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சாதனை பாகுபலி-2

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடி படமாக வெளியாகியுள்ள 'பாகுபலி-2' திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. இந்த படம் 3 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படத்தை தவிர, தற்போது அறிமுகமாகியுள்ள பாகுபலி சேலைகள் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளதாம்.

கனவுகள் என்ன நிறத்தில் வருகின்றன என்பது தெரியுமா?

உறங்கும் போது மனிதர்கள் கனவு காண்பது வழக்கம். 12 சதவீதம் பேர் கருப்பு வெள்ளையாகவே கனவு காண்கிறார்கள். பார்வை இல்லாதவர்களாலும் கனவு காண முடியும். நாம் ஏற்கனவே பார்த்தவரின் முகத்தை மட்டுமே கனவில் காண முடியும். விழித்து எழுந்த 5 நிமிடத்தில் 50 சதவீதம் கனவுகள் நமக்கு மறந்து போய் விடும். ஒரு சராசரி மனிதன் ஆயுளில் 6 ஆண்டுகள் கனவிலேயே செலவழிக்கிறான். நீங்கள் எங்கிருந்தாலும் ஒரு இரவில் சராசரியாக 4 முதல் 7 கனவுகள் வரை காண முடியும்.

வாழை இலையில் சாப்பிடுவது ஏன்?

நமது முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக வாழை இலையும் உள்ளது என்று சொல்லாம். ஏனெனில் அக்காலத்தில் எல்லாம் தட்டுக்களை பயன்படுத்துவதை விட, வாழை இலையைத் தான் அதிகம் பயன்படுத்தினார்கள். அதிலும் விருந்து என்று சொன்னாலே, வாழை இலை இல்லாமல் விருந்து நடைபெறாது. அந்த அளவிற்கு வாழை இலையானது மிகவும் முக்கியமான ஒன்றாக நம் முன்னோர்களின் மத்தியில் இருந்து வந்தது. வாழை இலையிலேயே சாப்பிட்டு வந்திருந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட்டு இருக்கலாம். வாழை இலையில் உணவை வைக்கும் போது, அதில் உள்ள உப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்றவை செரிமான ஆசிட்டின் சுரப்பை அதிகரித்து, உணவானது எளிதில் செரிமான மடைய உதவுகின்றன.மேலும் இலையில் சாதத்தை சூடாக வைக்கம் போது, சாதமானது இலையில் உள்ள குளோரோபில்லை உறிஞ்சி விடுவதால், உடலுக்கு வேண்டிய குளோரோபில் கிடைக்கிறது. வாழையில் தினமும் சாப்பிட்டு வந்தால், இளநரை வருவது தடுக்கப்பட்டு, நீண்ட நாட்கள் முடியானது கருப்பாகவே இருக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்களை தடுக்க, வாழை இலையில் நல்லெண்ணெயை தடவி, அந்த இலையை சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து, அவ்விலையின் மேல் குழந்தையை படுக்க வைத்தால், சூரிய ஒளியில் இருந்து குழந்தைக்கு வைட்டமின் டி கிடைப்பதுடன்,  வாழை இலையானது குழந்தையை குளிர்ச்சியுடன் வைத்து சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.இப்போதும் ஒன்று ஆகப் போவதில்லை. அனைவரும் இன்று முதல் வாழை இலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கிய மான வாழ்க்கையை வாழலாம்.

பட்டினி கிடந்தாலும் இளைக்காது

மீன்களில் அதிக கேட்கும் திறன் கொண்டது சுறா மீன்கள். சுறா இனங்களில் மொத்தம் 440 வகை இருக்கின்றன. அவற்றில் 30 வகையான சுறாக்கள் தான் மனிதர்களை தாக்கும் வல்லமை கொண்டவை. சுறாக்களின் வகைகளுக்கு ஏற்ப வளர்ச்சியிலும் சில சில மாறுபாடுகளை கொண்டிருக்கும். சில சுறாக்கள் 15 மீட்டர் நீளம் வளரும். சில சுறாக்கள் 12 மீட்டர் நீளம் வளரும். பொதுவாக சுறாக்கள் அனைத்தும் நான்கு வரிசை பற்களை கொண்டது. ஒரு பல் விழுந்தாலும் ஏழு எட்டு நாட்களில் மீண்டும் அதே இடத்தில் பல் முளைத்துவிடும். சுறாக்களுக்கு கூர்மையான பார்வைத் திறன் இல்லை என்றாலும் மந்தமான வெளிச்சத்தில் பார்வை திறன் கொண்டது. இவை 100 குட்டிகள் கூட போடும். குட்டி சுறாக்கள் பிறந்தது முதல்தானே இரை தேடிக்கொள்ளும். சுறாக்கள் மாதக்கணக்கில் பட்டினி இருந்தால் கூட அவை உடல் இளைத்து போகாத வண்ணம் அதன் உடம்பில் இருக்கும் கொழுப்பு எண்ணெய் அவற்றை பாதுகாக்கும். அழிந்த வரும் உயிரினங்கள் பட்டியலில் சுறாக்களும் இருப்பதால் அவற்றை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

6 வயதில் கோடீஸ்வரனான சிறுவன்

ஆறே வயதான ரியான் என்ற சிறுவன் தனது பொம்மைகளை மதிப்பீடு செய்யும் வீடீயோவை பிரபலமான யூடியூப்பில் அப்ளோடு செய்ததின் மூலம் ஒரு   வருடத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை அச்சிறுவன் ஈட்டியுள்ளான். பொம்மைகளை அதிகமாக விரும்பும் ரியான் எந்த ஒரு பொம்மை வாங்குவதற்கு முன்பும் அதன் மதிப்பீடு பற்றி ஆராய்ந்த பின்பே அதனை வாங்குவார். தனது நான்கு வயதிலேயே தனது பெற்றோரின் உதவியுடன் தனது 'ரியான் டாய்ஸ் ரெவியூ' (Ryan Toysreview) என்கிற யூடியூப் சேனலை மார்ச் மாதம் 2015 ஆம் ஆண்டு துவங்கினர். ஆரம்பத்தில், ரியனின்  காணொளி பிரபலமடையவில்லை ஆனாலும் ரியான் மற்றும் அவனது பெற்றோர்கள் விடாமுயற்சியாக தினந்தோறும்  ஒரு காணொளியை பதிவேற்றம் செய்தனர் . ஜூலை 2015 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட   ரியனின் 'ஜியன்ட் எக்க் சர்ப்ரைஸ் '(Giant Egg Surprise) என்ற காணொளி  இணையத்தில்  வைரலானது. அந்த வீடியோவை இதுவரை 800 மில்லியன் மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்த யூடியூப் சேனலின் மூலம் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே மாதம் பத்து லட்சமாகும் . இந்த யூடியூப் சேனல் இதுவரை 1 கோடி ரசிகர்களை கொண்டுள்ளது .

அழிவின் விளிம்பில் இந்திய ஓநாய்கள்

அழிந்து வரும் உயிரினங்களில் பட்டியலில் தற்போது இந்திய ஓநாய்களும் இடம் பெற்றுள்ளன. முன்பு நம்பப்பட்டு வந்ததை காட்டிலும் சற்று விரைவாகவே அவற்றின் எண்ணிக்கை சரிவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பரிணாம வரலாற்றில் மிகவும் முந்தையதாக இந்திய ஓநாய்கள் கணிக்கப்பட்டுள்ளன. இந்திய ஓநாய்கள் எனப்படுபவை இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற பிராந்தியங்களில் காணக் கூடியவை. தற்போது பாகிஸ்தானில் அவை குறித்த கணக்கெடுப்புகள் எதுவும் இல்லை. தற்போது இந்தியாவில் அவற்றின் எண்ணிக்கை 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்திய புலிகளின் நிலையைப் போலவே ஓநாய்களின் நிலைமையும் உள்ளது. அமெரிக்காவில் இதே போன்று அழியும் நிலையில் இருந்த சிவப்பு ஓநாய்கள் தற்போது ஓரளவுக்கு மீட்கப்பட்டதை போல, இந்தியா மற்றும் பாகிஸ்தானை வாழ்விடங்களாக கொண்ட இந்திய ஓநாய்களை காக்க வேண்டும் என்பதே ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago