பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பல்வேறு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின், புதிய முயற்சியாக கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். கால்சைட் முறையால் வளிமண்டலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஓசோன் படலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கால்சைட் தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஆப்பிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களை விட மைக்ரோசாப்ட் நிறுவனமே ஊழியர்கள் புதிய சிந்தனைகளுடன் பணிபுரிய சுதந்திரம் அளிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் வேலைவாய்ப்பு குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமர் பிர்வாத்கார் என்பவரின் நிறுவனம் ஆய்வு நடத்தியது.இதில், பேஸ்புக் நிறுவனம் ஊழியர்களிடையே புதிய சிந்தனைகளை விதைக்கத் தவறிவிட்டது எனவும், ஆப்பிள் நிறுவனத்தை விட மைக்ரோசாப்ட் நிறுவனமே ஊழியர்களை புதிய சிந்தனைகளுடன் பணியாற்ற அனுமதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வரிசையில் கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
வெப்பம், நிலஅதிர்வு காரணமாக ரயில் தன்டவாளங்கள் சுருங்கி, விரிவதால், தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே ஜல்லிக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருக்கவே ஜல்லிக் கற்கள் மீது தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.
உலகிலேயே மிக சிறிய வவ்வால் இனங்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண வெள்ளி காசுகளை காட்டிலும் உருவத்தில் சிறியவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிட்டிஸ் ஹாக் நோஸ் வவ்வால் அல்லது பம்பிள்பீ வவ்வால் என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் எடை 2 கிராமுக்கும் சற்று குறைவுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அழிந்து வரும் அரிய வகை இனமான இந்த வவ்வால்கள் பொதுவாக தாய்லாந்து, மியான்மர் நாடுகளில் காணப்படுகின்றன. ஆற்றங்கரையோாரம் உள்ள பாறைகளின் குகைகளே இவைகளின் வசிப்பிடங்களாகும். இவை கூட்டம் கூட்டமாக வசிக்கக் கூடியவை. ஒரு கூட்டத்தில் சுமார் 100 வவ்வால்கள் வரை காணப்படும்.
இங்கிலாந்து வங்கி திங்களன்று ஒரு ட்வீட் மூலம் புதிய 5 பவுண்டு நோட்டுகளில் விலங்கு கொழுப்பு (animal fat) இருப்பதாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.இதை தொடர்ந்து சைவ உணவு உண்பவர்கள் பெரும் காட்டம் அடைந்துள்ளனர். அந்த நோட்டுகளை நீக்க வேண்டும் என ஒரு மனுவில் இது வரை சுமார் 19,000 பேர் கையெழுத்திட்டு வங்கியிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.
மீன்களில் அதிக கேட்கும் திறன் கொண்டது சுறா மீன்கள். சுறா இனங்களில் மொத்தம் 440 வகை இருக்கின்றன. அவற்றில் 30 வகையான சுறாக்கள் தான் மனிதர்களை தாக்கும் வல்லமை கொண்டவை. சுறாக்களின் வகைகளுக்கு ஏற்ப வளர்ச்சியிலும் சில சில மாறுபாடுகளை கொண்டிருக்கும். சில சுறாக்கள் 15 மீட்டர் நீளம் வளரும். சில சுறாக்கள் 12 மீட்டர் நீளம் வளரும். பொதுவாக சுறாக்கள் அனைத்தும் நான்கு வரிசை பற்களை கொண்டது. ஒரு பல் விழுந்தாலும் ஏழு எட்டு நாட்களில் மீண்டும் அதே இடத்தில் பல் முளைத்துவிடும். சுறாக்களுக்கு கூர்மையான பார்வைத் திறன் இல்லை என்றாலும் மந்தமான வெளிச்சத்தில் பார்வை திறன் கொண்டது. இவை 100 குட்டிகள் கூட போடும். குட்டி சுறாக்கள் பிறந்தது முதல்தானே இரை தேடிக்கொள்ளும். சுறாக்கள் மாதக்கணக்கில் பட்டினி இருந்தால் கூட அவை உடல் இளைத்து போகாத வண்ணம் அதன் உடம்பில் இருக்கும் கொழுப்பு எண்ணெய் அவற்றை பாதுகாக்கும். அழிந்த வரும் உயிரினங்கள் பட்டியலில் சுறாக்களும் இருப்பதால் அவற்றை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 1 day 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 5 days 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 1 day ago |
-
அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமை ரத்துக்கு எதிர்ப்பு: ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் பேரணி
03 Jul 2022மெல்போர்ன் : அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் சுமார் 15,000 பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
-
இன்று சூரியனில் இருந்து தொலை தூர நிலைக்கு பூமி செல்வதால் குளிர் உயரும்
03 Jul 2022புதுடெல்லி : சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
-
விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்
03 Jul 2022எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்டில் விராட் கோலி, ஜானி பேர்ஸ்டோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
-
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
03 Jul 2022தூத்துக்குடி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது அலகுகள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மி
-
பெய்து வரும் தொடர் கனமழை: சிட்னியில் வெள்ள நீரில் மூழ்கிய குடியிருப்புகள்
03 Jul 2022சிட்னி : ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சிட்னியில் உள்ள ஆயிரக்கணக்கான பொது
-
நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
03 Jul 2022நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க.
-
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுரை
03 Jul 2022பாரீஸ் : வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தென்கொரியா, ஜப்பானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்: வடகொரியா விமர்சனம்
03 Jul 2022சியோல் : ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது.
-
11-ல் நடக்கும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொது செயலாளர் பதவி உருவாக்கப்படும் : நத்தம் விஸ்வநாதன் பேட்டி
03 Jul 2022சென்னை : வரும் 11-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க.
-
11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை : வைத்திலிங்கம் திட்டவட்டம்
03 Jul 2022சென்னை : 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
-
செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடு பணிகள்: தலைமை செயலாளர் இறையன்பு உயர் அலுவலர்களுடன் ஆய்வு
03 Jul 2022சென்னை : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு
-
உஸ்பெகிஸ்தானில் ஆக. 2 வரை அவசர நிலை பிறப்பிப்பு : அதிபர் மாளிகை தகவல்
03 Jul 2022தாஷ்கண்ட் : கரகல்பக்ஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைமை ஆகஸ்ட் 2 வரை நீடிக்கும் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
-
சென்னை காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை : அலைமோதிய வாடிக்கையாளர்கள்
03 Jul 2022சென்னை : வார விடுமுறை நாளான நேற்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது.
-
1974-ல் உருவாக்கிய தன்னுடைய 'ரெஸ்யூமை' பகிர்ந்த பில்கேட்ஸ்
03 Jul 2022வாஷிங்டன் : 1974-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய ரெஸ்யூமை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.
-
ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனம்
03 Jul 2022புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
03 Jul 2022புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் எல்லையிலிருந்து பணமும் பெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது.
-
ஒழுங்கீனம், முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக நடவடிக்கை எடுப்பேன் : நாமக்கல் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
03 Jul 2022நாமக்கல் : ஒழுங்கீனம் மற்றும் முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
-
காரைக்காலில் காலரா தொற்று: இன்று முதல் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
03 Jul 2022புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
-
ஹாங்காங் அருகே புயலில் சிக்கி மூழ்கும் கப்பல் : ஊழியர்களை மீட்க போராடும் கடலோர காவல்படை
03 Jul 2022ஹாங்காங் : தென் சீனக்கடலில் இயக்கப்படும் என்ஜினீயரிங் கப்பல் ஒன்று, ஹாங்காங் அருகே புயலில் சிக்கி கவிழ்ந்துள்ளது.
-
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் திருப்பூர், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
03 Jul 2022சென்னை : காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் திருப்பூர் தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர
-
உலகிற்கே இந்தியா தலைமை தாங்கும்: அடுத்த 40 ஆண்டுகள் இந்தியாவில் பா.ஜ.க.வின் சகாப்தமாக இருக்கும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 Jul 2022ஐதராபாத் : அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பா.ஜ.கவின் சகாப்தமாக இருக்கும் என்றும், உலகிற்கே இந்தியா தலைமை தாங்கும் என்றும் தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொர
-
8 பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
03 Jul 2022சென்னை : கோவை, நெல்லை உள்ளிட்ட 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.
-
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 10 பேர் பலி
03 Jul 2022பாட்னா : பீகாரில் மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பீகார் முழுவதும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒரே நாளில் மி
-
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் : தமிழக அரசிடம் பரிந்துரை தாக்கல்
03 Jul 2022சென்னை : சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
எந்தவொரு எம்.எல்.ஏ.வையும் வற்புறுத்தி அழைக்கவில்லை: உத்தவ் தாக்கரே மீது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடும் தாக்கு
03 Jul 2022மும்பை : எந்தவொரு எம்எல்ஏ.,வையும் வற்புறுத்தி அழைக்கவில்லை என்றும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பது தற்போது தெரிந்து விட்டது என்றும் மகாராஷ்டிர முத