முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கல்லால் செய்யப்பட்ட பழம்பெரும் நாதஸ்வர கருவி

தமிழர்களின் பழம்பெரும் இசைக்கருவிகளுல் ஒன்று நாதஸ்வரம். அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் தவறாம் இடம் பெறக் கூடியதாகும். இது பொதுவாக ஆச்சா என்ற மரத்தில்தான் செய்யப்படுகிறது. ஆனால் கல்லால் செய்யப்பட்ட நாதஸ்வரம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் நாதஸ்வரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது.மற்றொரு கல் நாதஸ்வரம்:  தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான  ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் உண்டு. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட   இந்த கல் நாதஸ்வரம். இப்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.

ஆண்களுக்கு அதிகம்

அதிக உடல் எடை காரணமாக திடீரென மரணம் ஏற்படும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கு 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலின் எடை சராசரியாக இருக்கும் வரையில் எந்த பிரச்னையும் எழுவதில்லை. ஆனால் அதையும் தாண்டி உடல் எடை, அதிகரிக்க, அதிகரிக்க பக்க விளைவுகளும் அதிகரிக்கும். உலகம் முழுவதும் 40 மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் அதிக உடல் பருமான மக்கள் சாதாரண எடையில் உள்ளவர்களைவிட மூன்று வருடங்கள் முன்னதாகாவே உயிரிழ்ந்து விடுவதாக கூறப்பட்டுள்ளது.இதேபோல், வயது முதிர்ச்சிக்கு முன்பே அகால மரணம் ஏற்பட அதிக உடல் எடை காரணமாக அமைகிறது என்றும், இந்த ஆபத்து பெண்களைவிட ஆண்களுக்கு மூன்று மடங்கு அதிகம் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியான எடையுள்ள மக்கள் தங்கள் ஆயுட் காலத்தில் 10 வருடங்களை இழப்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

அதிசய ரயில்

ஹரியானா மாநிலத்தில் இருந்து இமாச்சல பிரதேசத்ரதிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. டிசம்பரில், இந்த ரயில் தண்டவாளப்பாதை பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தாலும் இந்த ரயில் தடையில்லாமல் 365 நாட்களும் ஓடக்கூடியதாகவுள்ளது. பனிக்கட்டிகள் தண்டவாளத்தில் விழுந்தாலும் அதனை அப்புறப்படுத்தும் நவீன கருவிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில் பாதை  ஐ.நா. பாரம்பரிய பாதுகாப்பு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. தற்போது தேசிய தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த நிலையில், பல ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகவும், சில ரயில்கள் ரத்தும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஹரியானா - இமாசலப்பிரதேச ரயில் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது.

வெட்டுக்கிளிகளின் காதுகள் எங்குள்ளன தெரியுமா?

உலகில் உள்ள பெரும்பாலான ஜீவராசிகளுக்கும் புற ஒலிகளை கேட்கும் வகையில் காதுகள் அமைந்துள்்ளன. மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளுக்கு காதுகள் அதன் தலையிலேயே அமைந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மனிதனை போல அல்லாமல் வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் எங்குள்ளன தெரியுமா? வெட்டுக்கிளிகளின் காதுகள் அவற்றின் வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. ஒலிகளை கேட்கும் வகையில் அதன் வயிற்றில் அடிப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சவ்வு போன்ற பகுதிக்கு டைம்பனம் என்று பெயர்.

தூங்கினால் சம்பளம்

தூங்குவதுதான் வேலை என்றால்?  கசக்குமா  அதுவும் அந்தப் பணியை சிறப்பாகச் செய்தால் ஆண்டிற்கு $20,000 வெள்ளியை ஈட்டலாம். பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ இந்த 'அரிய' வாய்ப்பை வழங்குகின்றது. சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள். ஊட்டச்சத்துப் பொருளை உட்கொள்வது, தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிக்க வேண்டும். பின்னர், அது குறித்த அறிக்கையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.

சானிடைசர்கள் : கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்

சானிடைசர் பயன்படுத்துவதால் சில தொல்லைகள் ஏற்படலாம். சானிட்டைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் உள்ளதால் வைரஸ்களை கொல்லும் ஆற்றல் படைத்தவை. ஆனால் சில சுத்திகரிப்பான்களில் ட்ரைக்ளோசன் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரைக்ளோசன் பூச்சிக்கொல்லிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வகை வேதிப்பொருள். இது விஷத்தன்மைக் கொண்டது. இது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. இத்தகைய சுத்திகரிப்பான்களை அடிக்கடி பயன்படுத்திவிட்டு ஏதேனும் உணவைச் சாப்பிடுவதால் இது எளிதில் நம் உடலில் செல்லக்கூடும். இதனால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். தசைகள் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்படும். இதனால் செரிமான அமைப்பும் பாதிப்படையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோயெதிர்ப்பு சக்தியும் பாதிப்படையும். இதனால் உடலும் பலவீனமடையும். எனவே சாப்பிடுவதற்கு முன்பு சானிட்டீசரைப் பயன்படுத்தி கை கழுவுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். முகத்தின் அருகில் கையைக் கொண்டு செல்வதினாலும் அந்த ரசாயனங்கள் சுவாசப்பாதை வழியே உடலினுள் நுழைந்து சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே ட்ரைக்ளோசன் இல்லாத சானிடைசரை வாங்கி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நமக்காகவே இருக்கிறது இயற்கையான சுத்திகரிப்பான்களான வேப்பிலையும், மஞ்சளும். இரண்டையும் நீரில் கலக்குங்கள்.. உடலை கைகளை கவலையின்றி கழுவுங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago