முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாஸ்போர்ட்டில் முதன்முறையாக புகைப்படம் ஒட்டும் முறை எப்போது வந்தது தெரியுமா?

பாஸ்போர்ட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. பைபிள் காலத்திலேயே ‘பாஸ்போர்ட்’ போன்ற ஆவணம் பயன்பாட்டில் இருந்தது உங்களுக்குத் தெரியுமா? பாரசீக அரசரான ஒன்றாம் அர்டாக்செர்செக்ஸ், நெஹேமியா என்பவர் யூதேயா வழியாக பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு கடிதம் ஒன்றை வழங்கினார். அதுதான் முதல் பாஸ்போர்ட் எனக் கருதப்படுகிறது. ஸ்காண்டிநேவிய பாஸ்போர்ட் மீது புற ஊதாக் கதிர் வெளிச்சத்தைப் பாய்ச்சினால், வானவில் போல வானில் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டும் ‘நாதர்ன் லைட்ஸ்’ போன்ற ஒளி ஜாலத்தைப் பார்க்க முடியும். பாஸ்போர்ட்டில், அதற்கு உரியவரின் படம் அவசியம். முதல் உலகப்போர் துவங்கிய பிறகுதான் பாஸ்போர்ட்டில் புகைப்படம் இருக்க வேண்டியது கட்டாயமானது. ஜெர்மனிக்காக உளவு வேலை பார்த்த ஒருவர் ஒரு போலி அமெரிக்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இங்கிலாந்துக்குள் நுழைந்தார். இதையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படம் நிச்சயம் தேவை என்ற நிலை கொண்டுவரப்பட்டது. இது 1915 இல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பாஸ்போர்ட் அறி முகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஒருவர் தமக்குப் பிடித்த எந்த ஒரு புகைப் படத்தையும் பாஸ் போர்ட்டுக்குக் கொடுக்கலாம். குடும்பத்தோடு இருக்கும் குழு புகைப்படம் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிளிகளைப் போல மிமிக்ரி செய்யும் பேபி சீல்கள்

தங்களது குரல்களை நேரத்துக்கு தக்கபடி மாற்றிக் கொள்ளும் பாலூட்டி விலங்கினங்களில் சீல்களும் ஒன்று. இவை பனி படர்ந்த துருவ பிரதேசங்களில் வாழ்பவை. அண்மையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் குட்டி சீல்கள் தங்களது குரல்களை மாற்றிக் கொண்டு மனிதர்களைப் போலவும், கிளிகளைப் போலவும் சத்தம் எழுப்புவதை கண்டறிந்துள்ளனர். அவை தங்களது ஒரிஜினல் குரலை மாற்றி, மனிதர்களைப் போல, கிளிகளைப் போல மிமிக்ரி செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். தங்களது குரல்களை ஏற்ற இறக்கத்துடன் மாற்றத் தெரிந்த பாலூட்டி இனங்களில் சீல்களும் தற்போது இணைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்தில் உள்ள Max Planck Institute for Psycholinguistics என்ற ஆய்வகம்தான் தற்போது இந்த ஆய்வை கண்டறிந்துள்ளது. இதற்காக 1 முதல் 3 வாரங்கள் வரையிலான வயதுடைய 8 பேபி சீல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதன் குரல்களை தொடர்ந்து பதிவு செய்து ஆய்வு செய்ததில் இவை தெரியவந்துள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்டுள்ள Wadden Sea பகுதியில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எளிய வழி இருக்கு

தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கண்டறிய, போன் தொலையும் முன்னரே உங்களது ஸ்மார்ட்போனின் கூகுள் செட்டிங்-ஐ செயல்படுத்தி இருக்க வேண்டும். மேலும் லொகேஷன் ரிபோர்டிங் ஆப்ஷன் செட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். தொலைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை டிராக் செய்ய முதலில் கணினி அல்லது லேப்டாப் மூலம் பிரவுஸர் ஒன்றை ஓபன் செய்து, பின் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பதிவு செய்திருந்த கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்து, இறுதியாக கூகுளில் "find my phone" என டைப் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கும் இடம் தெரியும். துல்லியமாக அறிந்து கொள்ள "Ring button" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இந்தியாவுக்கு முதல் நோபல் பரிசு

உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தவர் கவிஞர் ரவீந்திராத் தாகூர். இவர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார். இளம் பருவத்திலேயே இலக்கியம், ஓவியம், இசை , கவிதை என்று பன்முகத்திறமைக் கொண்டிருந்தார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றவர் அங்குள்ள கல்விமுறையை அறிந்துகொண்டார். அதன்படி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வங்காளத்தில் 'சாந்தி நிகேதன்' பள்ளியைத் துவங்கினார். இங்கு படித்தவர்தான் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. ’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பிற்காக தாகூருக்கு இலக்கியத்திற்காக நோபல் பரிசு கடந்த 1913 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அப்பரிசை வென்ற  முதல் ஆசியர் என்ற பெருமையும் தாகூருக்கு உள்ளது.

மொபைல் அரக்கன்

செல்ஃபோனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்களுக்கும், புற்று நோய்க்கும் பலமான தொடர்பு உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த கதிர்வீச்சு மூளையில் புற்று நோயை உண்டாக்கும் என்றும் குழந்தைகள் தொடர்ந்து இந்த கதிர்வீச்சில் தாக்கப்பட்டால் லுக்கீமியா வருவதற்கு சாத்தியங்கள் உள்ளன எனவும் தெரிய வந்துள்ளது.

தண்ணீர் நல்லது

தண்ணீர் என்பது ஆக்சிஜன் மற்றும்  ஹைட்ரஜன் கலந்த கூட்டுக் கலவையாகும். தண்ணீரை அதிக அளவில் குடித்தால்  உடல் எடை குண்டாகாமல் சீரான உடலுடன் அழகாக இருக்க முடியும் என்கிறார்கள்  மருத்துவ நிபுணர்கள். தண்ணீரை அதிக அளவில் குடிப்பதால் யூரிக் அமிலம் போன்ற தேவையற்ற கழிவுகள் விரைவில் சிறு நீர் வழியாக வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் உடல், மூளை செயல்பாட்டு திறன் மிகச்சிறப்பாக செயல்பட்டு சுறுசுறுப்பையும் தரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago