திபெத்தில் வரலாற்றிலேயே முதன்முறையாக சுமார் ரூ.4181 கோடி மதிப்பில் புல்லட் ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. தலைநகர் லாசாவில் தொடங்கி Nyingchi நகர் வரையிலான 250 மைல் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக்கல் ரயில்தடம் 47 சுரங்க வழித்தடங்கள், 121 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்கிறது. மேலும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 9840 அடி உயரத்திலேயே பெரும்பாலும் இந்த தடம் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரயிலில் தானியியங்கி முறையில் கோச்களுக்குள் இருக்கும் ஆக்ஸிசன் அளவை கண்டறியும் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பெரும் பாலும் ரயில் பயணங்களின் போது தேநீர் விரும்பிகளுக்கு கிடைக்கக் கூடிய அனுபவம்தான் இன்ஸ்டன்ட் டீ பேக். உடனடி தேயிலை பொட்டலம். சூடான நீரில் அல்லது பாலில் அதை அமிழ்த்தியவுடன் சுடச்சுட தேநீர் தயார். இது எப்போது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா... அதுவும் மிகவும் தற்செயலாகத் தான் இது வடிவமைக்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..1908 இல் நியூயார்க் நகரைச் சேர்ந்த தேயிலை வியாபாரி தாமஸ் சுல்லிவன் என்பவர் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கு சிறிய சிலிக்கன் பைகளில் தேநீரை பார்சலாக அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதை பெற்ற வாடிக்கையாளர்கள் அதை பிரிக்காமல் அப்படியே சூடான நீர் அல்லது பாலில் கலக்க வேண்டும் என்று கருதி அதையும் சேர்த்து போட்டு கொதிக்க வைத்து பருகியுள்ளனர். இது சிறப்பாக இருப்பதாகவும் அவருக்கு கடிதமும் எழுதினர். பிறகென்ன அவரது பிசினஸ் மூளை இதை சிக்கென பிடித்துக் கொண்டு குட்டி குட்டி இன்ஸ்டன்ட் டீ பேக்குகளை வடிவமைத்து பேடன்ட் உரிமை பெற்று விற்கத் தொடங்கி... தற்போது நம்மூர் ரயில் நிலையம் வரையிலும் வந்து விட்டது என்றால் ஆச்சரியம் தானே..
சுமார் 451 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலா உருவானது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம், அப்பல்லோ 14 விண்கலம் மூலம் மனிதர்களை முதன் முறையாக சந்திரனுக்கு அனுப்பியது. சந்திரன் எப்போது உருவானது, அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன்படி, சந்திரனில் உள்ள தாதுக்கள் மற்றும் கனிமத்தை வைத்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சந்திரன் 451 ஆண்டுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பல உயிர்கள் வாழும் பூமியின் வயது 4500 கோடி ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு காபி இல்லை என்றால் அன்றைய தினம் அத்தனை சீக்கிரம் விடியாது. வேறு சிலருக்கோ வேலையும் ஓடாது, மூளையும் இயங்காது. ஆகவே காபி குடித்து நாளை உற்சாகமாக வைத்துக் கொள்பவர்கள் உலகம் முழுவதும் ஏராளமானோர் நிரம்பி வழிகின்றனர். அது, சரி, காபி குடித்தால் உடலுக்கு நல்லதா கெட்டதா, இதயத்தை பலப்படுத்துமா, பலவீனப்படுத்துமா இப்படி ஆயிரம் கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவது சகஜம். அத்தகைய காபி குறித்த பல்வேறு உடல்நலம் சார்ந்த கருத்துகள் நிலவி வந்த நிலையில் ஒருவர் ஒருநளைக்கு 25 கப் காபி குடித்தாலும் ஒன்றுமே ஆகாது என்கிற புதிய ஆய்வறிக்கை காபி பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. காபியில் அதிகளவு காஃபின் இருப்பதால் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து நிலவியது. திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உலகளவில் கோடிக்கணக்கானோர் தினமும் காபி அருந்தி வருகின்றனர். இந்நிலையில், 8,000 பேரை தேர்வு செய்து லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, தினசரி ஒரு கப், மூன்று கப், பல கப் என்று காபி அருந்துபவர்களை தரம் பிடித்து ஆய்வு மேற்கொண்டதில் யாருக்கும் காபியால் எந்த பாதிப்பும் உடலில் ஏற்படவில்லை. இதனால், நாள் ஒன்றுக்கு 25 கப் வரை காபி அருந்தினால் கூட அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் காபி எனும் தேசிய பானம் காப்பாற்றப்பட்டுள்ளதாக குதூகலிக்கின்றனர் காபி பிரியர்கள்!
கிராமம் என்றால் வீடுகள் இருக்கும். வீடுகள் என்றால் வாசல் கதவுகள் இருக்கும்தானே.. ஆனால் ஒரு வித்தியாசமான கிராமத்தில் வீடுகளுக்கு வாசல் கதவுகளே கிடையாது. அந்த கிராமம் எங்குள்ளது தெரியுமா...இந்தியாவில்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷானி ஷிங்னாப்பூர்தான் அது. இது சனீஸ்வர பகவானின் திருத்தலமாகவும் வணங்கப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை கொண்டுள்ள இந்த கிராமத்துக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கதவு இல்லாத போதும் இந்த கிராம மக்கள் இரவில் நன்றாகவே உறங்குகின்றனர். ஏன் தெரியுமா... சனி பகவான் காவல் காப்பதாக ஒரு ஐதீகம். என்னா ஒரு ஆச்சரியம் பாருங்கள்..
சீனாவில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று கனான் என்ற பகுதியில் கிடைத்துள்ளது. படிமத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த பறவை 3 ஆயிரம் கிலோ எடையும், 8 மீட்டர் உயரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்தப் பறவைக்கு பெய்பிலாங் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பறவை மிகப்பெரிய பெரிய அளவில் கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 40 செ.மீ. உயரம், 5 கிலோ எடை கொண்ட ராட்சத பழங்கால முட்டைகளின் படிமங்கள் ஏராளமான கிடைத்தன. அந்த முட்டைகள் இந்த பறவையினத்தின் முட்டைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பறவைகள் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.