முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வெயிட்டர் ரோபோ

பெங்களூர் விஆர் மாலில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பாப்  (பட்லர் ஒ பிஸ்ட்ரோ)என்கிற ரோபோ உணவு பரிமாறியது. குழந்தைகளை வெகுவாக கவர்ந்த அந்த ரோபோவை உருவாக்கியது சிறுவர்கள்தான் என்பது ஆச்சர்யம். இந்தியாவிலேயே உணவு பரிமாறும் முதல் ரோபோ இதுதான்.

ஒரே நேர்கோட்டில்...

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது. கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் ரிஷிகேஷ் ரயில் நிலையம், அடுத்து 14 கி.மீட்டர் தள்ளி உள்ள காலேஷ்வரம் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் அரிதாக அமைந்துள்ளது.

உலகின் மிக உயரமான சிலை எங்கிருக்கிறது தெரியுமா?

உலகில் மிக உயரமான சிலை எங்கிருக்கிறது தெரியுமா.. இந்தியாவில்தான். குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலையாகும். 182 மீட்டர் அதாவது 597 அடி உயரம் கொண்ட இந்த சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவற்றை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது. 2 ஆவதாக சீனாவில் உள்ள ஸ்பிரிங் கோயிலில் உள்ள புத்தர் சிலை 128 மீட்டர் உயரமும், 3 ஆவதாக சீனாவில் நன்சானில் உள்ள 108 மீட்டர் உயரம் கொண்ட மற்றொரு புத்தர் சிலையும் 3 ஆவது இடத்தில் உள்ளது. இதில் அமெரிக்காவின் 93 மீட்டர் உயரம் கொண்ட சுதந்திர தேவி சிலைக்கு 4 ஆவது இடமே கிடைத்துள்ளது.

ஃபேஸ்புக் பயன்பாடு

உலக அளவில் அதிக பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் மொத்தம் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 24 கோடிதான். கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளதாம்.

சிவப்பு செவ்வாய்

சூரியனில் இருந்து 4-வதாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் புயலால் மேற்பரப்பில் இருக்கும் சிவப்பு மாசை வளிமண்டலத்தில் நிரப்பிவிடும்.அங்கு, ஈர்ப்பு விசை குறைவு காரணமாக, இந்த மாசுத் துகள்கள் நீண்ட நாட்களுக்கு அப்படியே பரவியிருக்கும். இதனாலேயே செவ்வாய் கோள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

நடைபயிற்சி

கூழாங்கல் நடைபாதையில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago