முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சனி கிரகத்தில் வைர மழை

ஜோதிடத்திலும், மக்கள் பேச்சு வழக்கிலும் சனிக்கு நல்ல பெயர் கிடையாது. மக்கள் வாயில் அதிகமாக வசைபாடப்படும் ஒரு கிரகம் சனி. ஆனால் அறிவியலில் ஆச்சரியம் மிகுந்தது மட்டுமல்ல, மிகுந்த வளம் மிக்கதும் கூட. அண்மையில் வெளியான ஆய்வில் வெளிவந்த உண்மையை கேட்டால் அப்படியே ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பீர்கள்... ஆம், நாம் அன்றாடம் வசை பாடும் சனி கிரகத்தில் ஆண்டுதோறும் வைர மழை பொழியுமாம்.. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சனி, யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களில் காணப்படும் அதிக அழுத்தம் காரணமாக கார்பன் அணுக்கள் அப்படியே படிகங்களாக மாறி விடுமாம். கார்பன் அணு படிகம் என்பது வைரமன்றி வேறில்லை என்பது விபரமறிந்தவர்களுக்கு தெரியும்.  இதை ஒரு குட்டி ஆய்வகத்தில் வைத்து பரிசோதித்தும் பார்த்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சனி கிரகத்தில் அழுத்ததில் ஏற்படும் மாற்றம் காரணமாக இது போல எக்கச்சக்கமான வைர மழை பொழியுமாம். அதாவது சுமார் 2.2 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமானவை அவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

முத்திரையிட பயன்படும் அரக்கு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?

முந்தைய காலங்களில் மூடி சீலிடுவதற்கும் அவற்றில் அரசாங்க முத்திரை இடுவதற்கும் அரக்கு என்ற  பொருளை பயன்படுத்துவது வழக்கம். இன்றைக்கும் ஜப்தி செய்யப்பட்ட இடங்களை நீதிமன்ற ஊழியர்கள் பூட்டி விட்டு அதன் மீது துணியை சுற்று அரக்கால் சீல் வைப்பதை நாம் பார்த்திருக்கலாம். மேலும் இந்த அரக்கு உணவு பண்டங்கள், மரச் சாமான்கள் போன்றவற்றுக்கு நிறமேற்றம் செய்யவதற்கும், பர்னிச்சர் பொருள்களை செம்மைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதெல்லாம் சரி.. இது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா... இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள காடுகளில் மரங்களில் வசிக்கும் ஒரு வகை பூச்சியினத்தில் இருந்துதான் இந்த அரக்கு பெறப்படுகிறது. இதன் பெண் பூச்சிகள் உருவாக்கும் திரவம்தான் பசை போல இறுகி பின்பு அரக்காக மாறுகிறது என்றால் ஆச்சரியம் தானே.

மாறும் துருவங்கள்

பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030-இல் பூமிக்கு ஆபத்து ஏற்படுமாம். காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படுவதால் தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படுமாம். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர்.

பேக்ஸ் இயந்திரம் எப்படி உருவாச்சு தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain) என்பவர் 1843 இல் ஒரு எந்திரத்தை உருவாக்கினார். அவர் பல சோதனைகளையும் அதில் மேற்கொண்டார். அதில், செம்புக் கம்பிச்சுருளில் வைக்கப்படும் பேனா எழுதுவதை, சுருளின் மற்றோர் இடத்தில் இருந்த 2 ஆவது பேனா, அதை நகல் எடுக்கத் துவங்கியது.  பின்னர் 1851இல் ஃபிரெட்ரிக் பேக்வெல் (Fredric Bakewell) என்பவர் லண்டனில் நடைபெற்ற உலக வணிகப் பொருட்காட்சியில் இதை மக்களிடம் விளக்கிக் காட்டினார். தொடர்ந்து 1862 இல் இத்தாலி மருத்துவர் ஒருவர் இக்கருவியை ஒத்த வேறோர் கருவியை உருவாக்கி அதற்கு பான் டெலிகிராஃப் (Pan telegraph) எனப் பெயரிட்டார். இக்கருவி பெயின் உருவாக்கிய கருவியின் கோட்பாட்டில் அமைந்திருந்தது. "பிரெஞ்ச் அஞ்சல் மற்றும் தந்திச் சேவை" என்ற நிறுவனம் இதை 1856 முதல் 1870 வரை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியது.ஆர்தர் கோர்ன் (Arthur Korn) என்ற ஜெர்மன் விஞ்ஞானி 1902இல் புகைப்படங்களை அனுப்பக்கூடிய ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். இது புதிய பேக்ஸ் இயந்திரத்தின் அசலான முன்னோடி வடிவமாக திகழ்ந்தது. இதைக் கண்டறிந்த பெருமை அவரையேச் சேரும். அந்நாளில் பல ஜெர்மன் செய்தித்தாள் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வந்தன. பின்னர் 1925ஆம் ஆண்டு ஒரு பிரான்ஸ் விஞ்ஞானி இதன் ஒளிப்படத் திறனை அதிகரித்து இக்கருவியை மேம்படுத்தினார். இந்த எந்திரமே சிற்சில மாறுதல்களுடன் புதிய பேக்ஸ் இயந்திரமாக தற்போதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கிடைத்தது ஆதாரம்

லிபியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் கிடைத்த ஆதாரங்களின் படி, மனிதர்கள் 10,000 வருடங்களுக்கு முன்பே காட்டு தானியங்கள் மற்றும் தாவரங்களை வைத்து பானைகளில் சமைத்துள்ளது தெரிய வந்தள்ளது. ஆரம்பத்தில் சைவமாகத்தான் இருந்த மனிதர்கள் , பின் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடும் அசைவத்திற்கு மாறியிருக்கின்றனர்.

மருந்துகளை தேன் கலந்து கொடுப்பதேன்?

அந்த காலத்தில் மருந்துகளை, சூரணங்களை தேன் கலந்து நமக்கு பெரியவர்கள் கொடுப்பார்கள்... ஞாபகம் உள்ளதா? அது ஏன் தெரியுமா? மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை தரும். தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து உட்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago