முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொம்புக்காக வேட்டை

காண்டா மிருகம் வேகமாக அழிந்துவரும் விலங்கினங்கள் பட்டியலில் இருக்கிறது. அதன் கொம்புகள்தான். சீனாவிலும்,  வியட்நாமிலும் காண்டா மிருகத்தின் கொம்புக்கு ஏகப்பட்ட கிராக்கி. ஒரு கிலோ காண்டா மிருக கொம்பின் விலை ஒரு கிலோ தங்கத்தின் விலையை விட  அதிகம். இந்த கொம்பு ஆண்மையை அதிகரிப்பதாகவும், புற்றுநோயை தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் அது அதிகம் கொல்லப்படுகிறது.உண்மையில் இதன் கொம்பில் ஆண்மைக்கான சமாச்சாரம் எதுவும் இருக்கிறதா என்றால் ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை. நமது நகத்திலும், காண்டா மிருக கொம்பிலும் ஒரே வகையான மூலப்பொருட்கள் தான் உள்ளன.

செயற்கை பூமி எங்கிருக்கு தெரியுமா..

சூரிய மண்டலம் தொடங்கி பால்வெளி பாதை வழியாக பிரபஞ்சம் முழுவதும் பயணித்தால்.. அப்படி மனிதனால் பயணிக்க இயலாது.. ஒரு வேளை பயணித்தால்.. பூமியைப் போன்ற நீரும், ஜீவராசிகளும் வசிக்கும் இன்னொரு பூமியை கண்டுபிடிக்க முடியுமா.. முடியவே முடியாது.. இந்த பிரபஞ்சத்தில் ஒரே ஒரு உயிர்க்கோளமான பூமி மட்டும்தான்...ஆனாலும் விஞ்ஞானத்தின் தேடல் தீராது.. அது கிடக்கட்டும்..அப்படியானால் பூமி போல செயற்கை பூமி செய்ய முடியுமா.. அது போன்ற ஒன்று இருக்கிறதா... என்றால் ஆம் அல்லது இல்லை... ஆம் என்ற பதில் மூலமாக நாம் அமெரிக்காவுக்கு சென்றால் அங்குதான் செயற்கை பூமி உள்ளது.. இன்றைக்கு பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளால் மாசுபட்டு கிடக்கும் பூமிக்கு மாற்றாக.. எந்த வித செயற்கையும் இன்றி இயற்கையாக இருக்கும் வகையில் அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தின் டஸ்கர் என்ற நகரிலிருந்து 64 கிமீ தொலைவில்தான் அது அமைக்கப்பட்டுள்ளது. ஆரக்கிள் என பெயரிடப்பட்டுள்ள அந்த சிறிய செயற்கை பூமி கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் பூமி தோன்றிய போது எப்படி இருந்ததோ அதே போன்று தூய்மையாக....உயரிய தொழில் நுட்ப செயற்கை கண்ணாடி தடுப்பு சுவர்களுக்குள் 3.4 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிகாற்று உள்ளே செல்லவோ, உள்ளிருக்கும் காற்று வெளியே வரவோ இயலாது. அங்கே, மழைக்காடுகள், பவளப்பாறைகள், வெப்ப மண்டல மரங்கள்,  உயிரினங்கள் என அனைத்தும் மிகவும் சுதந்திரமாக திரிகின்றன. அதற்கு இடையூறு இன்றி அவை விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்படுகின்றன.. என்ன கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..

அலாரம் ஸ்டிக்கர்

பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க ஒரு ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் அணியும் உள்ளாடை உள்ளிட்ட எதன் மீதும் ஒட்டிக்கொள்ளலாம். ஸ்மார்ட்ஃபோனை மையமாகக் கொண்டு செயல்படும் இதை, தவறான நோக்கத்தில் யாராவது தொட்டால், குறிப்பிட்ட 5 நபர்களுக்கு இருக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களுடன் குறுஞ்செய்தி அனுப்பும்.

வியப்பில் ஆழ்த்தும் வித்தியாசமான பாலம்

வியட்நாமில் டா நாங்கிற்கு வெளியே கல்லினால் வடிமைக்கப்பட்ட இரு கைகள் பாலத்தை தாங்குவது போல இருக்கும் ஒரு பிரமாண்டமான காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. கோல்டன் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் பாலம் பனாமா மலைகளுக்கு மேலே கடல் மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் அதாவது சுமார் 3280 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேலிருந்து பார்த்தால் அந்த இடத்தை சுற்றியுள்ள பரந்த ஆழகான காட்சிகளை கண்டு ரசிக்கலாம். தங்க நிற வண்ணம் கொண்ட இந்த பாலம் ஊதா நிற லோபிலியா கிரிஸான்தமம்களால் (purple Lobelia Chrysanthemums ) வரிசையாக அமைந்துள்ளது மற்றும் கிட்டத்தட்ட 150 மீட்டர் நீளமுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலத்தை தாங்கி கொண்டிருக்கும் செதுக்கப்பட்ட கைகள் தான் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் அழகிய காட்சியை தருகிறது.

20, 450 போராட்டங்கள்

கடந்த 2‌015-ம் ஆண்டில் தமிழகத்தில் 20,450 போராட்டங்கள் நடைபெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 2-ம் இடத்திலும்  (13,089) , உத்தராகண்ட் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. (10,477). அதிகளவு போராட்டங்கள் நடத்தியோர் பட்டியலில் அரசியல் கட்சிகளும், அரசு ஊழியர் அமைப்புகளும் அடுத்தடுத்து உள்ளன.

முதன் முதலில் எடுத்த புகைப்படத்தை புரொசஸ் செய்ய எவ்வளவு நேரமானது தெரியுமா?

Nicéphore Niépce என்பவர் எடுத்த புகைப்படம் தான் உலகின் முதல் புகைப்படம் என்று சொல்லப்படுகிறது. இந்த புகைப்படத்தை அவர் எடுத்து அதை புரொசஸ் செய்வதற்கு மட்டும் 8 மணி நேரம் பிடித்துள்ளது. அப்போதைய கையால் மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பங்கள் காரணமாக இத்தனை மணி நேரமானது. மேலும் ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கும் நீண்ட நேரமானது. எனவேதான் பண்டைய காலங்களில் புகைப்படத்துக்கு நீண்ட நேரம் போஸ் கொடுக்க வேண்டியிருந்ததால், பெரும்பாலும் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்கள் சிரிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஏனெனில் அவர்கள் நீண்ட நேரம் அசையாமல் இருக்க வேண்டும் அல்லவா. அது சரி முதலில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்துக்கு என்ன டைட்டில் தெரியுமா  "லே கிராஸில் ஜன்னல் வழி தெரியும் காட்சி" என்பதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்