முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அமேசிங் அமேசான்

தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருக்கும் அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளாககும். உலகின் 9 நாடுகளில் எல்லைகளுக்குள் விரிந்துள்ள அமேசான் காடுகள், 1300 வகை பறவை இனங்கள், 427 வகை பாலூட்டி இனங்கள், 2,200 மீன் இனங்கள் மற்றும் 50 ஆயிரம் வகையான தாவர வகைகளின் புகலிடமாக இருக்கிறது. அதில் 16 ஆயிரம் வகை மர வகைகள்உள்ளதாம். இந்த காடுகள் கடந்த 55 லட்சம் ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.இங்கு இதுவரை 11,000-த்துக்கும் மேற்பட்ட புதிய வகை மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிக்கப்படாத மரங்கள் மற்றும் செடிகள் இருக்கலாம் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவற்றையெல்லாம் அடையாளம் காண இன்னும் 300 ஆண்டுகளுக்கு மேலான கால அவகாசம் தேவைப்படுமாம்.

உலகிலேயே மிகப்பெரிய பூரான் இங்கிாலந்தில் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உள்ள Northumberland மலைப்பகுதியில் கேம்ப்ரிட்ஜ் பல்கலை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வரலாற்றில் இது வரையில் இல்லாத வகையில் உலகிலேயே மிகப் பெரிய சைஸிலான பூரான் இன ஊர்வன பூச்சியை கண்டு பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு கார் சைஸூக்கு மிகப் பெரியதாக இருந்துள்ளது. சுமார் 2.7 மீட்டர் நீளமும், 50 கிலோ எடையும் கொண்டதாக அது இருந்தது என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். உயிர் படிமமாக கிடைத்துள்ள அந்த பூச்சி சுமார் 326 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களை போல...

குரங்களால் மனிதர்களைப் போல பேசவும், சிரிக்கவும் முடியாது. ஆனால், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு இவைகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லையாம்.

எதிர்மறை ஆற்றல்

குழந்தைகள் அழுவது, நீர் வீழ்ச்சி, புலியின் ஓவியம், தாஜ்மஹால், மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை விளைவை ஏற்படுத்துமாம். அதாவது, மேற்கண்ட ஓவியங்களை வைத்தால் சண்டை, மன அழுத்தம், வாக்குவாதங்கள், துரதிஷ்டம் ஏற்படுமாம்.

இப்படியும் சிலர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

உடல் நலத்திற்கு...

மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்று பொதுவான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதால் உடல்நலம் மேம்படும். அத்துடன் சமூகத்தில் பலருடன் பழக்கம் ஏற்படும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், நல்ல எண்ணம் மற்றும் செயல்பாடுகளால் உடல் நலம் மேம்படும் என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago