முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரத்த வங்கி தொடங்கிய வரலாறு

1616 இல் வில்லியம் ஹார்வி என்பவர்தான் விலங்குகளின் உடலில் ரத்தம் பாய்கிறது என்பதை கண்டறிந்தார். 1665 இல் ரிச்சர்ட் லோவர் என்பவர் ஒரு நாயின் உடலிலிருந்து ரத்தத்தை மற்ற நாய்க்கு வெற்றிகரமாக மாற்றி உயிர் பிழைக்க செய்தார். 1667 இல் பிரான்ஸில்தான் மனித உடலில் ஒரு ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை ஏற்றி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1668 இல் ரத்தம் தொடர்பான ஆய்வுகளுக்கு போப் தடைவிதித்தார். 1818 இல் ஒருவரின் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றி வெற்றி கண்டார் மருத்துவர் ஜேம்ஸ் புளூன்ட். 1874 இல் ஒருவரின் ரத்தத்தையே சேமித்து அவருக்கே ஏற்றும் முறையை வில்லியம் ஹைமோர் என்பவர் முதன்முறையாக சோதித்து வெற்றி பெற்றார்.  கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவர்தான் யாருடைய ரத்தத்தையும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்ற இயலாது என்பதை நிரூபித்தார். பின்னர் 1900 இல் அவர் பரிசோதனையில்தான் ஏ,பி, ஓ வகை ரத்தங்கள் கண்டறியப்பட்டன. இதுதான் ரத்த பரிசோதனையின் மிகப் பெரிய திறப்பாக அமைந்தது. மருத்துவர் ஹூஸ்டன்தான் சோடியம் சிட்ரேட்டை பயன்படுத்தி ரத்தம் உறைதலை தடுக்க முடியும் என்பதை கண்டறிந்தார். இரண்டாம் உலகப் போரின் போது பால் பாட்டில்களை சுத்தம் செய்து அதில் ரத்தத்தை அடைத்து வீரர்களுக்கு ஏற்றுவதற்காக கொண்டு செல்லப்பட்டன.  உலகின் முதல் நடமாடும் ரத்த வங்கி ஸ்பானிய உள்நாட்டு போரின் போது 1930களில் அமைக்கப்பட்டது. முதல் ரத்த வங்கி அமெரிக்காவில் 1937 இல் மார்ச் 15 ஆம் தேதி சிகாகோ கூக் கவுன்டி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல் ரத்த வங்கி 1939 இல் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.

இந்தியாவுக்கு முதலிடம்

உலகம் முழுவதும் 32 கோடிக்கும் அதிகமான மக்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலைகள் நடைபெறுவதாகவும் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி, 2015ம் ஆண்டு வரையான காலத்தில், இந்திய அளவில் 5.66 கோடி தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், 3 கோடி பேர் மன அழுத்தம்.

அசத்தலாக 5 வண்ணங்களில் நெளிந்தோடும் அதிசய ஆறு

கொலம்பியாவின் லா மக்கரேனாவில் உள்ள கானோ கிறிஸ்டல்ஸ் நதியானது "ஐந்து நிறங்களின் நதி" மற்றும் "திரவ வானவில்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் தெளிவான நீரின் கீழே நீங்கள் காணக்கூடிய பல வண்ணங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆற்றில் உள்ள நீர்வாழ் தாவரங்களின் இனப்பெருக்க செயல்பாட்டின் போது வண்ணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அவை Macarenia clavigera என்று அழைக்கப்படுகின்றன, இங்கு ஓடும் தூய, தெளிவான நீரால் பொது மக்கள் ஈர்க்கப்பட்டு இப்பகுதியை பார்ப்பதற்காக ஆண்டு தோறும் ஏராளமானோர் வருகின்றனர்.

சாதனைப் பெண்

இத்தாலியில் லோ ஷோ டி ரிகார்டு  என்ற உலகசாதனைக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சர்க்கஸ் பெண் எல்லிஸ், 35 வாட்ஸ் திறன் கொண்ட ஓடும் 2 ஃபேன்களின் இறக்கைகளை தன் நாக்கை வைத்து நிறுத்தி அசத்தினார். இது போன்று அவர் தொடர்ந்து 16 முறை 2 ஃபேன்களின் இறக்கைகளை நிறுத்தி சாதனை படைத்துள்ளார்.

பீர் பாட்டில்

செவ்வாயில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை, நாசா விஞ்ஞானிகள் மேற்கொற்கொண்டு வரும் நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் மது பாட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த மது பாட்டில் புகைப்படம், கடந்த 2007-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாம்.

தேங்காய் துருவுவது ஈஸி...

சமையல் செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரியும்.. எது கடினமானது என்றால்... தேங்காயை உடைத்து சில்லை எடுத்து மிக்ஸியில் போட்டு துருவுவது.. அல்லது கேரட் சீவலால் சீவி.. மிக்ஸியில் போட்டு அரைப்பது.. தண்ணீர் ஊற்றவில்லை என்றால் மிக்ஸியில் தேங்காய் சரியாக அரையாது.. இதனால் துருவல் பதத்துக்கு எடுக்க முடியாது.. இனி அந்த கவலை எல்லாம் வேண்டாம்.. சந்தைக்கு வந்துள்ளது table top wet grinder coconut scraper அது என்னங்க.. புதுசா இருக்கு.. அதான்... கிரைண்டரில் பொருத்தி தேங்காயை துருவும் கருவி.. டேபிள் டாப் கிரைண்டரில் அதை பொருத்த வேண்டியது..தேங்காய் மூடியை வைத்து.. சுவிட்சை இயக்கினால்.. பூ மாதிரி தேங்காய் துருவல் ரெடி.. என்ன இல்லத்தரசிகளே.. இல்லத்தரசர்களே.. தேங்காய் துருவ ரெடியா... அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது..பாருங்க.. வாங்குங்க.. ஜாலியா துருவுங்க... இந்த பண்டிகை காலத்தில் தேங்காய் பர்பி செய்து உண்டு மகிழுங்கள்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago