முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

அழகு பொருள்

தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும். புளியுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை செய்தால், முகம் பளிச்சென்று இருக்கும். மேலும்,இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு பளிச் தோற்றம் தருவதிலும் இதன் பங்கு அதிகம்.

நாள்தோறும் 200 உயிரினங்கள் அழிகின்றன

சூழல் மாசு உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150-200 வகையான தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் சமநிலை இழப்பால் டைனோசர்கள் அழிந்ததிலிருந்து தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் சூழல் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.

மூக்கின் நுகர்வு திறன்

மனித புலன்களில் பார்வை மங்கிப்போனால், அதைச் சரி செய்துகொள்ள கண்ணாடி போட்டுக் கொள்ளலாம். காது கேட்கும் திறன் குறைந்தால், ஹியரிங் எய்ட் வைத்துக் கொள்ளலாம். ஆனால், முகர்வுத் திறனை மேம்படுத்திக் கொள்ள அப்படி எந்தத் தொழில்நுட்பமும் இல்லையா என உங்களைப் போல எனக்கும் கேள்வி எழுந்தது. அதற்கும் பதில் தொழில்நுட்ப வடிவில் வந்துவிட்டது. ஷக் மெக்கின்லி என்ற பொறியாளர் / கண்டுபிடிப்பாளரின் முயற்சியில் உருவாகியிருக்கும் முகர்வு ரேஞ்சர் (Nasal Ranger) பார்ப்பதற்கு பைனாகுலர் போலவே இருக்கும் இந்த உபகரணம் நம்மைச் சுற்றியிருக்கும் வாசனை வடிவத்தை மேம்படுத்தி ஆல்ஃபேக்டரிக்கு அனுப்புவதன் மூலம் மெல்லிய வாசனைகளையும் கண்டறிந்து சேமித்துக் கொள்ளப் பயன்படுகிறது. உணவுப் பொருள் உற்பத்தி, வாசனைத்திரவிய உருவாக்கம், சுவாசிக்கும் காற்றின் தரம் போன்ற பல பிரிவுகளில் மேற்படி உபகரணம் உதவியாக இருக்கும்.

மின் விசிறி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

மனிதன் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தான். முன்னாளில் மர இலைகளும், பறவைச் சிறகுகளும் விசிறியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பனை ஓலைகளை நீரில் நனைத்து விசிறியாகப் பயன்படுத்தினர்.வௌவாலின் சிறகுகளைப் பார்த்து வியந்த ஜப்பானியர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டில் அத்தகைய விசிறிகளை உருவாக்கினர்.மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். இதன் தொழில்நுட்பம் மிக விரைவாகப் பிற நாடுகளுக்கும் பரவி மக்களிடம் பெரும் புகழ் பெற்றது. 

மலாலா யூசுப்சாய்!

பாகிஸ்தானில் பெண் கல்வி பற்றி பேசிய மலாலா துப்பாகியால் சுடப்பட்டார். தோட்டா இவரது மண்டை ஓட்டில் இருந்து தண்டுவடம் நோக்கி பாய்ந்தது. எனினும் மரணத்தை தொட்டு திரும்பிய அவர் பெண் கல்விக்காக மீண்டும் குரல் கொடுக்க ஆரம்பித்தார் மலாலா. இதற்காக இவர் நோபல் பரிசு பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago