முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கடலுக்கு அடியில் ஏசு : காணக்கிடைக்காத அற்புதம்

கடலுக்கு அடியில் மிகவும் பிரமாண்டமான ஏசு சிலை உள்ளது. அதை ஆண்டுதோறும் ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா..கிறிஸ்ட் ஆஃப் தி அபிஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் நீரில் மூழ்கிய வெண்கலச் சிலை ஆகும், முதலாவது மத்தியதரைக் கடலில், சான் ஃப்ரூட்டூசோவுக்கு அப்பால், இத்தாலிய ரிவியராவில் உள்ள காமோக்லி மற்றும் போர்டோஃபினோவிற்கு இடையே அமைந்துள்ளது. கிறிஸ்துவின் சிலை 25 அடி நீரில் நிற்கிறது. நீட்டிய கைகள் மேற்பரப்பில் இருந்து 10 அடிக்கும் குறைவாக உள்ளது. அங்கு நீங்கள் சிலையை மேற்பரப்பிலிருந்து பார்க்க முடியும் அல்லது சிலையை நெருக்கமாகப் பார்க்க கீழே டைவ் செய்து சென்றும் பார்க்கலாம். உலகின் மிகவும் அரிதான இடங்களில் இந்த கடலுக்கு அடியில் ஏசு சிலையும் ஒன்றாகும் ஏன் கடலுக்கு அடியில் சிலை... பிரபல கடல் மூழ்கி வீரர் Duilio Marcante என்பவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இத்தாலி சிற்பி  Guido Galletti என்பவர் இந்த பிரமாண்ட சிலையை உருவாக்கி கடலுக்கு அடியில் நிறுவினார். கடலில் உயிரிகளுக்கும், கடலில் உயிரிழந்தவர்களுக்கும் நினைவு சின்னமாகவும், கடலின் அடியிலிருந்து ஏசு உலகை காப்பார் என்று கருதியும் இது அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கிலோ டீத்தூள் ரூ.99999 கேட்டால் அசந்து போவீங்க

இந்தியாவில் அதுவும் அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் டீத்தூள்தான் தற்போது சுமார் ரூ.1 லட்சத்துக்கு அதாவது ரூ.99999 க்கு விற்பனையாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் திப்ருகார் மாவட்டத்தில் அமைந்துள்ள மனோகரி டீ எஸ்டேட்டில் விளையும் மனோகரி கோல்ட் டீத்தூள்தான் தற்போது ஏலத்தில் கிலோவுக்கு ரூ.99999 க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அதற்கு முன்னதாக அதிக பட்ச விலையாக கோல்டன் பட்டர்ஃபிளை டீத்தூள்தான் ரூ.75 ஆயிரத்துகு விற்று சாதனை படைத்தது. தற்போது அதை மனோகரி டீத்தூள் முறியடித்துள்ளது.

அத்திப்பழம் மகிமை

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.  தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.  மலச்சிக்கல் போகும்.

பூமிக்கும் வந்து விட்டது கருப்பு பெட்டி

அண்மையில் நம்ம தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ேபாது, மீட்பு படையினர் முதலில் தேடியது கருப்பு பெட்டியைத்தான். விமானங்கள் விபத்துக்குள்ளானால் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டியைத்தான். இந்த கருப்பு பெட்டி என்பது விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக அதனுள் நடந்த அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்து வைத்திருக்கும் பெட்டகம். இதன் மூலம் விபத்துக்கான காரணத்தை டக்கென்று கண்டுபிடித்து விடலாம். அதே போல பூமிக்கும் ஏதேனும் கருப்பு பெட்டி இருக்கா... என்று கேட்டால். இப்போதைக்கு இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஒரு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.பூமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பதிவு செய்யக்கூடிய டிசாஸ்டர் ரெக்கார்டர் என்ற ஒரு சாதனம் இந்த ஆண்டு நிறுவப்பட உள்ளது. பூமியின் கருப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் இத் திட்டம் நமது கிரகத்தின் அழிவுக்கான பாதையின் ஒவ்வொரு அடியையும் துல்லியமாக பதிவு செய்யும். சூரிய சக்தியால் இயங்கும் இந்த பெட்டகம் சராசரியாக ஒரு பள்ளிப் பேருந்தின் நீளம் இருக்கும்.இது எந்தவகையான இயற்கை பேரிடரையும் தாங்கிக் கொண்டு பூமியின் மீது நடக்கும் அனைத்து தரவுகளை சேமிக்க வல்லது. இது 7.5 செமீ தடிமனான எஃகு தகடுகளை கொண்டு மூடப்பட்டிருக்கும். பூமியில் உள்ள மிகவும் பாதுகாப்பான இடத்தில் இப்பெட்டி வைக்கப்படும்.இதில் வைக்கப்படும் ஹார்ட் டிரைவ்கள் காலநிலை தொடர்பான தகவல்களை பதிவுசெய்து சேமித்து வைக்கும். கிளெமெங்கர் பிபிடிஓ எனப்படும் தகவல் தொடர்பு நிறுவனம் மற்றும் க்ளூ சொசைட்டி ஆகியவை சேர்ந்து இதை மேற்கொள்ள  இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

உலகின் முதல் ஸ்பேஸ் ஹோட்டல்

ஓரியன் ஸ்பேன் எனும்  அமெரிக்க நிறுவனம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகின் முதல் சொகுசு  விண்வெளி (ஸ்பேஸ்) ஹோட்டலை அறிமுகப்படுத்தியது. இந்த சொகுசு விடுதிக்கு அரோரா நிலையம் என பெயரிடப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஹோட்டல் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் எனவும், முதல் விருந்தினர் குழு 2022 ஆம் ஆண்டு அனுப்பப்படுவார்கள் எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சொகுசு ஆகாய விடுதியில் ஒரே நேரத்தில் ஆறு பேர் மட்டுமே தங்க முடியும். 12 நாட்கள் இந்த விடுதியில் தங்குவதற்கு ஒருவருக்கு 9.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 71.33 கோடி முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ன ஸ்பேஸ் ஓட்டல் போகத் தயாரா.

நட்சத்திரம் அருகில்

இந்த மாதம் முதல் வாரத்தில் C/2016 U1 NEOWISE எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். NEOWISE என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள கோளான புதன் வழியாக கடந்து செல்லும் இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago