முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வெட்டுக்கிளிகளின் காதுகள் எங்குள்ளன தெரியுமா?

உலகில் உள்ள பெரும்பாலான ஜீவராசிகளுக்கும் புற ஒலிகளை கேட்கும் வகையில் காதுகள் அமைந்துள்்ளன. மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளுக்கு காதுகள் அதன் தலையிலேயே அமைந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மனிதனை போல அல்லாமல் வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் எங்குள்ளன தெரியுமா? வெட்டுக்கிளிகளின் காதுகள் அவற்றின் வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. ஒலிகளை கேட்கும் வகையில் அதன் வயிற்றில் அடிப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சவ்வு போன்ற பகுதிக்கு டைம்பனம் என்று பெயர்.

வீட்டில் சீனித்துளசி வளர்த்தால் சர்க்கரைக்கு குட்பை சொல்லி விடலாம்

ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் ‘இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி’ மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே. ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சீனாதான் அதிகம் ஏற்றுமதி செய்கிறது. கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை விட, வெள்ளைச் சர்க்கரை மனிதனை அதிக நோய்களுக்கு ஆளாக்குகிறது. நாட்டுச் சர்க்கரை வாங்க முடியாதவர்கள் சீனித்துளசி செடிகளை வளர்க்கலாம். நான்கு பேர் அருந்த நான்கு இலைகளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதனால் வெள்ளைச் சர்க்கரை வாங்கவும் தேவையில்லை, நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்தச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். மற்ற செடிகளைப் போல இதற்கும் கவனிப்பு இருந்தாலே போதுமானது. கரும்பின் சர்க்கரையை விட 20 சதவிகிதத்துக்கும் மேல், இனிப்புச் சுவை அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளன. சீனித்துளசி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு துளசியின் பொடியை தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பு. அப்புறம் என்ன...இப்போதே நர்சரிக்கு சென்று சீனித்துளசிக்கு ஆர்டர் செய்து விடுங்கள். என்ன சரிதானா..

மனித தோலால் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் எங்குள்ளது தெரியுமா?

காகிதங்களால் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்பாக, ஓலை சுவடிகள், தோல், பாப்பரசி போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் மனித தோலால் பைன்ட் செய்யப்பட்ட 3 புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலை கழக நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1880களின் மத்தியில் ஆர்சென் ஹவுஸே என்ற எழுத்தாளர் தனது நண்பரான டாக்டர் லுடோவிக் பவுலண்டுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர்தான் பெண் நோயாளி ஒருவரின் உடலில் உள்ள தோலால் இந்த புத்தகத்தை பைன்ட் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் இந்த நூலகத்தில் 1930களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தூங்கினால் சம்பளம்

தூங்குவதுதான் வேலை என்றால்?  கசக்குமா  அதுவும் அந்தப் பணியை சிறப்பாகச் செய்தால் ஆண்டிற்கு $20,000 வெள்ளியை ஈட்டலாம். பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ இந்த 'அரிய' வாய்ப்பை வழங்குகின்றது. சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள். ஊட்டச்சத்துப் பொருளை உட்கொள்வது, தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிக்க வேண்டும். பின்னர், அது குறித்த அறிக்கையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.

அதிசய விஞ்ஞானி

க்ரெய்க் வெண்டர் என்ற மருத்துவ விஞ்ஞானி, உலகில் முதல் முறையாக ஒரு உயிரை அடிப்படையிலிருந்து உருவாக்கியிருக்கிறார். 5,82,000 க்ரோமோஸோம் ஜோடிகளைச் சேர்த்து ஒரு பாக்டீரியாவைத் தயாரித்திருக்கிறார். இதற்கு Mycoplasma Laboratorium என்ற பெயரும் வைத்தாகிவிட்டது. தினம் நாம் செய்யும் எத்தனையோ வேலைகளுக்கு பாக்டீரியாக்களின் உதவி தேவையாக இருக்கின்றது. வெண்டரின் ஆசை என்னவென்றால், நமக்கு தேவைப்படும் எல்லா விதமான பாக்டீரியாக்களையும் ஆய்வகத்திலேயே தயாரிப்பதுதான்.

'ட்விட்டர்' தெரியாதது

பேஸ்புக் போலவே ஒரு பிரபலமான சமூக ஊடகம் ட்விட்டர். இது 2006 ஆம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நிறுவப்பட்டது. ட்விட்டர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் கணக்குப்படி 310 மில்லியன் பயனாளர்களை ட்விட்டர் கொண்டுள்ளது.ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை லாரி (Larry) எனும் பறவையாகும். ட்விட்டர் பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதை தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். ஒரு நாள் ட்விட்டரில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்குமாம். ட்விட்டரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்ததில்லை. இன்டர்நெட் பயன்படுத்தும் 90 சதவிகிதம் பேர் ட்விட்டரை பயன்படுத்துவது இல்லை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago