முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆர்வத்தை தூண்டும்

குழந்தைகளுக்கான உணவைத் தயாரிக்கும்போது அவர்களைக் கவரும் விதத்தில் உணவைத் தயாரிக்க வேண்டும். வெவ்வேறு வடிவங்களில் தோசை சுடலாம். வழக்கமான இட்லிக்குப் பதில், சிவப்பு அரிசி, கேழ்வரகு இட்லி என வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறிகள் சேர்த்து வித்தியாசமாகக் கொடுக்க அவர்கள் விரும்பி உண்ணுவர்.

பெட்ரோல் தரமானதா?

ஒரு வடிகட்டும் காகிதத்தில் சில துளிகள் பெட்ரோலை ஊற்றினால், சிறிது நேரத்தில் முழுதும் ஆவியானால் குட். இல்லையென்றால் கலப்படம். தெர்மாமீட்டரை பெட்ரோலில் வைத்து பார்த்தால், வெப்பநிலை குறைவாக காண்பித்தால், மண்ணெண்ணை கலப்பட பெட்ரோல். காப்பர் வலையில் பெட்ரோலை ஊற்றி எரிக்கும் போது கரிய புகை வந்தால் கலப்படம். என்ன ஓகேவா..

இரு மலைகளுக்கு நடுவே கயிறு கட்டி அசால்ட்டாக நடந்து சென்ற வாலிபர்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் Nathan Paulin. இவருக்கு உயரத்தில் கயிறு கட்டி நடப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி அத்தனை விருப்பம். சிலருக்கு தரையில் நடப்பதற்குள்ளேயே கண்ணை கட்டிக் கொண்டு வந்து விடும். ஆனால் மனுசன் எத்தனை உயரத்திலும் ஒரு ஒல்லியான கயிறை கட்டிக் கொண்டு சாதாரணமாக நடந்து சென்று விடுகிறார். இவர் ஏற்கனவே ஈபிள் டவர் உள்ளிட்ட பல்வேறு உயரமான இடங்களில் கயிறு கட்டி நடந்தவர். தற்போது  ரியோடி ஜெனிரோவில் உள்ள பாபிலோனியா மலைக்கும் உர்கா மலைக்கும் இடையே கயிறு கட்டி அசால்ட்டாக நடந்து சென்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது.  இரண்டுக்கும் இடையிலான தொலைவு 500 மீட்டர். உயரம் 264 அடி அதாவது 80 மீட்டர். மேலேயிருந்து கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. மனுசன் அதற்கெல்லாம் அசந்த ஆள் இல்லை. ஜாலியாக நடந்து மலையை கடந்து விட்டார்.

வாசிப்பு அவசியம்

பாடப் புத்தகங்கள் மட்டுமே பயன்தராது, பரந்து விரிந்த உலகில், பல விதமான நூல்களையும் வாசிக்க, மாணவர்கள் பழக வேண்டும் என்பது ஆசிரியர்களின் அறிவுரை. வருங்காலச் சந்ததிக‌ள் பல சங்கதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமானால், நூலகங்கள் நிலைத்திரு‌த்தல் அவசியம். நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன் என்பதை விட, நேரம் ஒதுக்கி வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிந்தனையின் தூண்டுகோல் புத்தகம். வாசிக்கும் பழக்கம் அருகி வரும் இக்காலத்தில், இப்பழக்கம் உடைய சிலருக்கு துணையாக இருப்பது நூலகங்கள். பரந்து பட்ட அறிவைப் பெற பல்துறை புத்தகங்களையும் வாசிப்பது அவசியம். வாசிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலேயே வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமை . ஏப்ரல் முதல் வாரம் உலக நூலக வாரமாக கொண்டாப்படுகிறது.

மனிதனால் மட்டும்...

சராசரியாக, வாழ்நாளில் 25 கோடி தடவை அழும் அல்லது கண்ணீர் விடும் ஒரே உயிரினம் மனிதன்தான். அதிகமாக சிரிக்கும் போது கண்ணீர் வரக் காரணம், கண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுரப்பியுள்ள தசைநார்கள் அழுத்தப்படுவதால்தான். ஆனால், பச்சிளம்குழந்தைகள் அழுவதில்லை, கத்த மட்டுமே செய்யுமாம்.

சோகத்தை வெளிப்படுத்த

ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்புக்கு பயன்படுத்திய பேனாவை உடைத்து விடுவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறைதான் இது. இதற்கு காரணம், உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காகவும், சோகத்தை வெளிப்படுத்தவும் இதை செய்து வந்துள்ளனர். ஆனால், நமது இந்திய சட்டப் புத்தகத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை. ஆங்கில யர்கள் ஆட்சிக் காலத்தில்தான் இந்த முறை பின்பற்றப்பட்ட து. அதற்காக நாமும் பின்பற்ற வேண்டுமா என்ன?.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago