கர்நாடக மாநிலம் தஷிண கன்னட மாவட்டத்தில் உள்ள கடப்பா தாலுகாவில் ராமகுஞ்சா கிராமத்தில் பாண்டவர் குகை எனப்படும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கல்லால் ஆன கல்லறை ஒன்று இருப்பதாக உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எம்எஸ்ஆர்எஸ் கல்லூரியின் தொல்லியல் துறை தலைவர் பேரா. முருகேஷி மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன கல்லறையை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி அதன் மேற்புறத்தில் உள்ள கல்லில் வட்ட வடிவில் அல்லது பூஜ்ய வடிவில் எழுதப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து முருகேஷி கூறுகையில், அதன் மேற்புறத்தில் காணப்படுவது வட்டமா அல்லது அப்போதே இங்கு வாழ்ந்த மக்கள் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிந்துள்ளனரா என்பது வியப்பாக உள்ளது. இது குறித்து மேலும் ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றார். கற்கால தொல்லியல் எச்சத்தின் மீது எழுதப்பட்டுள்ளது பூஜ்யமா என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி பொது மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
2016-ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இ.ஏ. ஜான்சன் என்பவர் தான், தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு முன்னோடி என்று கூறலாம். 1967 வரை ராயல் ரேடார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வேலையை விட்டு நின்ற பிறகு, 1968ல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் தொடர்பாக அறிவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில்தான், முதன்முதலாக தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. முதன்முதலாக தொடுதிரையை செயல்வழியில் வெளி உலகுக்குக் காண்பித்தவர், சாம் ஹர்ஸ்ட் என்பவர்.அமெரிக்காவில் உள்ள கென்ட்யூக்கி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார் ஹர்ஸ்ட். 1971ல், இவர் உருவாக்கிய முதல் தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு ‘எலோகிராஃப்’ (Elograph -– Electrical and Optoelectronic Graphene Devices) என்று பெயரிடப்பட்டது. இந்த எலோகிராஃப் (Elograph)தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை கென்ட்யூக்கி பல்கலைக்கழகம் பெற்றது. பின்னர் வேலையை விட்டுவிட்டு, எலோகிராஃபிக்ஸ் என்று தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கினார் சாம் ஹர்ஸ்ட். 1974ல், ஒளிபுகும் தொடுதிரையை பேராசிரியர் சாம் ஹர்ஸ்ட் உருவாக்கினார். சீமன்ஸ் நிறுவனத்தின் நிதியுதவிடன்தடை மின்னோட்ட தொடுதிரை தொழில்நுட்பத்தை ( resistive touch screen technology) உருவாக்கி, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். வளைவான கண்ணாடியாக இருந்த கருவிக்கு, எலோகிராஃபிக்ஸ் நிறுவனம் ‘டச் ஸ்கிரீன்’ என்று பெயரிட்டு அழைத்தது. அப்படிப் பிறந்ததுதான், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம்.
பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ. மொடலாக உள்ளார். கடந்த ஆண்டு ஒன்பது பெண்களை கூட்டாக திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.இவருக்கு லுவானா கசாகி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. என்றாலும், ஒரு தார மணத்தை எதிர்த்து புரட்சி செய்யவுள்ளதாக அறிவித்து, கடந்த ஆண்டு மேலும் 8 பெண்களை மணந்தார். அந்த மண நிகழ்வில் மனவி லுவானா கசாகியும் இருந்தார். பிரேசிலில் பலதார மணம் சட்டவிரோதமானது. எனவே மற்றைய 8 மனைவிகளுடன் சட்டபூர்வமாக திருமணம் நடக்கவில்லை. திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவிகளில் ஒருவரான அகதா என்பவர் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். பல மனைவிகளில் ஒருவராக வாழ விரும்பவில்லையென இப்பொழுது காரணம் கூறியுள்ளார். தற்போதைக்கு புதிதாக யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லையென ஆர்தர் கூறினாலும், விரைவில் இன்னும் 2 பெண்களை திருமணம் செய்து, மனைவிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த விரும்புகிறார். அவர் மேலும் கூறியதாவது: என் ஒவ்வொரு மனைவியுடனும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
சந்திரனிலும் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நம்முடைய பூமியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நமக்கு தெரியும். இதனால் அடிக்கடி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும். நம்முடைய பூமியைப் போலவே சந்திரனிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சந்திரனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அப்பல்லோ விண்வெளி வீரர்கள் அவர்கள் ஆய்வு செய்யும் இடங்களை சுற்றி நில அதிர்வு அளவீடுகளை நிறுவினார்கள். இந்த ஆய்வில் சந்திரனில் நிலநடுக்கம் இருபதிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரிக்டர் அளவில் 5.5 வரை பதிவானது. சந்திரனில் 700 கிலோ மீட்டர் வரைக்கும் ஆழத்தில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தாவரங்களைத்தான் விலங்குகளும், பூச்சிகளும், புழுக்களும் சாப்பிடும். ஆனால் புழு, பூச்சிகளை சாப்பிடும் தாவரங்களும் இருக்கின்றன என்பது ஆச்சரியம் தானே.. ஆனால் உண்மைதான். Carnivorous plant என்ற தாவரம் ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. அதான் விலங்குகளை விரும்பி உண்ணக் கூடியது. இவை பெரும்பாலும் பூச்சிகளையும், ஊர்வனவற்றையுமே குறி வைக்கின்றன. இதற்காகவே இவை சிறப்பான வடிவமைப்பை பெற்றுள்ளன. இதன் இலைகள் அருகில் வரும் பூச்சிகளை அப்படியே லபக் கென்று கவ்வி பிடித்து மூடிக் கொள்கின்றன. அதன் பின்னர் அதில் சுரக்கும் ஒரு வகை திரவம் அப்படியே பூச்சிகளை தின்று செரிக்க உதவுகின்றன. பெரும்பாலும் மண்ணில் நைட்ரசன் சத்து குறைவாக உள்ள சதுப்பு நிலங்களிலேயே இவை அதிகம் காணப்படுகின்றன. ஆகவே பூச்சிகளை விழுங்கி அதன் உடலில் உள்ள புரதத்தில் கலந்திருக்கும் நைட்ரசனை உறிஞ்சி விடுகின்றன.. நம்மூர்களில் இல்லை எனவே நாம் பயப்படத் தேவையில்லை..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிம்பிள் சிக்கன் கறி![]() 3 days 5 min ago |
முட்டை பக்கோடா![]() 5 days 23 hours ago |
ஸ்பைசி சிக்கன் கிரேவி![]() 1 week 3 days ago |
-
கள்ளச்சாராயத்தை ஒழிக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
29 May 2023சென்னை : தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
ஜப்பானில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து : தமிழகத்திற்கு ரூ.818 கோடி முதலீடு கிடைக்கும்
29 May 2023சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
-
150 வயது வரை உயிருடன் இருப்பேன்: சரத்குமார் பேச்சு
29 May 2023மதுரை : மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தான் 150 வயது வரை உயிருடன் இருப்பேன் எனவும், அதற்கான வித
-
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய சிறப்பு தகுதி பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி: சென்னை ஐகோர்ட்
29 May 2023சென்னை : சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தின்படி, சிறப்பு தகுதி பெற்றவர்கள் மட்டுமே கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய தகுதி உள்ளது என செ
-
டெல்லியில் பொதுமக்கள் முன்னிலையில் சிறுமியை குத்திக்கொன்ற காதலன்: முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்
29 May 2023புதுடெல்லி : டெல்லியில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் சிறுமியை காதலன் ஒருவன் கொடூரமாக குத்திக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பத்திரிகையாளர்களின் வீட்டுமனைப் பட்டா ரத்து: மதுரை, கலெக்டரின் ஆணையை திரும்பப்பெற தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
29 May 2023சென்னை : பத்திரிகையாளர்களின் வீட்டுமனைப் பட்டா ரத்து விவகாரத்தில் மதுரை, கலெக்டரின் ஆணையை திரும்பப்பெற தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
வெளிநாட்டு பயணங்களை முடித்து நாளை தமிழகம் திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 May 2023டோக்கியோ : சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நாளை இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
-
முடிவுக்கு வந்தது 'அக்னி நட்சத்திரம்': மேலும் ஒரு வாரத்திற்கு வெயில் நீடிக்க வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
29 May 2023புதுடெல்லி : கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகலுடன் முடிவடைந்தது.
-
தொடர்ந்து 4-வது நாளாக சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க கம்பத்தில் வனத்துறையினர் முகாம்
29 May 2023கம்பம் : கம்பம் அருகே 4-வது நாளாக சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகளுடன் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
-
ஜூலை மாதம் சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் தகவல்
29 May 2023புதுடெல்லி : சந்திரயான்-3 வருகிற ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
-
ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
29 May 2023புதுடெல்லி : நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மைசூரு அருகே சாலை விபத்தில் 10 பேர் பலி
29 May 2023மைசூர் : கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் - டி நரசிபுரா சாலையில் குருபுரு கிராமத்தின் பிஞ்சரா கம்பத்தில்இன்றி மதியம் நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர்
-
தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்: ஜப்பான் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
29 May 2023டோக்கியோ : ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.
-
இடஒதுக்கீடு நமது உரிமை என நாம் அனைவரும் சொல்வோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்
29 May 2023சென்னை : இடஒதுக்கீடு நமது உரிமை என்று அனைவரும் சொல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டென்னிஸ் பந்தால் கோலியின் ஓவியத்தை தீட்டிய தீவிர ரசிகர்
29 May 2023இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் குவித்து வருகிறார்.
-
ஜார்க்கண்ட்டில் சோகம்: ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி
29 May 2023ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிச்சித்பூர் ரயில்வே கேட் அருகே மின்கம்பத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியா
-
குவகாத்தி - ஜல்பைகுரி இடையேயான அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
29 May 2023புதுதில்லி : குவகாத்தி - ஜல்பைகுரி பகுதிகளுக்கு இடையேயான அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை திங்கள்கிழமை மதியம் காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்
-
துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலி: மணிப்பூர் விரைந்தார் அமித்ஷா
29 May 2023இம்பால் : மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையை அடுத்து துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலியாயினர்.
-
தமிழகத்தில் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்க அரசு திட்டம்
29 May 2023சென்னை, தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
பெண்கள் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் : சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி
29 May 2023திருப்பதி : பெண்கள் வங்கி கணக்கில் ரூ.15000 செலுத்தப்படும் என்று சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
-
விடுமுறையால் அதிகரித்த பக்தர்கள் வருகை: திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு நீண்டநேம் காத்திருக்கும் சூழ்நிலை
29 May 2023திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
பா.ஜ.க. எதிரான நிலைப்பாடு: பீகாரில் ஜூன் 12-ம் தேதி நடக்கிறது: எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்
29 May 2023புதுடெல்லி, வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க பீகாரில் ஜூன் 12-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியு
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: போட்டி நடுவர்களை அறிவித்த ஐசிசி
29 May 2023துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
ஓவல் மைதானத்தில்...
-
டெல்லியில் சிறுமி படுகொலை: விசாரணைக்குழு அமைத்தது தேசிய மகளிர் ஆணையம்
29 May 2023புதுடெல்லி : டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்தச் சம்பவம் குறித்து துரிதமாக, நியாயமாக விசாரணை நடத்துமாறு டெல்லி காவல் துறைக்கு தேசிய மக
-
இந்தியா - ஜப்பான் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
29 May 2023சென்னை : இந்தியா - ஜப்பான் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.