முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாம்பழ பேக்

மாம்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சருமம் சுருக்கம் அடைவதை தடுக்கும். முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். பின் உங்கள் முகம் ஜொலிக்கும்.  மாம்பழ சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள், கலந்து முகத்தில் பூசினால் முகப்பரு போகும்.

மாரடைப்பு பயம்

திடீரென நம் இதயம் வேகமாக துடித்து, சுயநினைவை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டால், உடனே நாம் தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும் இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

பையோனிக் தோல்

இன்றைய நவீன யுகத்தில் மனிதர்களைப் போன்றே உணர்வுகள் கொண்ட ரோபோக்களை கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ரோபோக்களின் கை, கால்களில் மனிதனை போன்று தொடு உணர்ச்சியை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 3டி அச்சிடப்பட்ட தொடுதிரை சென்சார்களை பயன்படுத்தி, 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பியோனிக் தோலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ரோபோக்களுக்கு தொடுதல் உணர்ச்சியை கொடுத்துள்ளனர், மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர். 4 அடுக்குகளை கொண்ட, 3D பிரின்டர் பயன்படுத்தி மின்னணு உணர்ச்சி கொண்ட ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். வருங்காலத்தில் உணர்வுகளுடன் சுயமாக சிந்திக்கும் திறனையும் ரோபோக்கள் பெற்று மனிதனின் மறு உருவமாக ஜொலிக்கும் என்பதே ஆராய்ச்சிகளின் கருத்து.

20, 450 போராட்டங்கள்

கடந்த 2‌015-ம் ஆண்டில் தமிழகத்தில் 20,450 போராட்டங்கள் நடைபெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 2-ம் இடத்திலும்  (13,089) , உத்தராகண்ட் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. (10,477). அதிகளவு போராட்டங்கள் நடத்தியோர் பட்டியலில் அரசியல் கட்சிகளும், அரசு ஊழியர் அமைப்புகளும் அடுத்தடுத்து உள்ளன.

விருச்சிகாசனம்

விருச்சிகாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். கை, கால்கள் வலிமையடையும். மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அனைத்துச் சுரப்பிகளும் சீராக இயங்க உதவுகிறது. இதனால் கண் பார்வை கூர்மையடையும். தொடர்ந்து செய்து வந்தால் இழந்த சக்தியை மீட்க முடியும். மேலும், உடலின் சோர்வை போக்க முடியும்.

புதிய கேமரா

கூகுள் க்ளிப்ஸ் என்ற தானியங்கி கேமராவில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றின் முகங்களை அடையாளம் காண முடியும். இந்த ஸ்மார்ட் கேமரா தான் இருக்கும் இடத்திலேயே எந்த விதமான மனித தலையீடும் இல்லாமல் புகைப்படங்களை எடுக்குமாம். இது 130 டிகிரி கோணத்தில் உள்ளவற்றை புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago