முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நியூஇயர் கொண்டாட

நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக போக விரும்புவது சென்னை மெரினா கடற்கரைதான். கிட்டத்தட்ட இரவு 8 மணிக்கே கடற்கரையில் விழா ஆரம்பித்துவிடும். நியூ இயர் கொண்டாட்டத்தின்போது கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டமாக இருக்கும் சென்னை மெரினா கடற்கரை. இங்கே கொண்டாட்டத்துக்கும் பஞ்சமிருக்காது. ஆடல், பாடல் என நள்ளிரவில் அமர்க்களமாகும் சென்னை.கடற்கரையைச் சுற்றியுள்ள அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, காமராஜர் நினைவகம் உள்ளிட்ட இடங்களிலும் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும். அதுமட்டுமின்றி நீங்கள் சென்னையில் உள்ள பல்வேறு மால்களிலும் புதுவருட கொண்டாட்டங்கள் களைகட்டும்.

முழு பிரபஞ்சமும் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது

மனிதன் அறிவியலில் எவ்வளவோ முன்னேறிவிட்டதாக பீற்றிக் கொள்ளலாம். ஆனால் பிரபஞ்சத்தின் முன்னால் அது இம்மி கூட கிடையாது. பிரபஞ்சத்தில் தற்கால நவீன மனிதன் தேடி கண்டடைந்த பிரபஞ்சம் எல்லாம் சூரிய குடும்பத்தில் ஒளி பாயும் அளவுக்குத்தான். அதை மொத்த பிரபஞ்சத்தோடு ஒப்பிடும் போது 10 சதவீதம் கூட கிடையாது. மீதமுள்ள 90 சதவீத பிரபஞ்சம் இருளில் ஆழ்ந்திருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்பதை பற்றி நமக்கு துளியும் தெரியாது. சூரியன், நட்சத்திரம் போன்ற ஒளி வீசும் கிரகங்களின் ஒளி செல்லாத பகுதிகளையும் தாண்டி பிரபஞ்சம் விரிந்து கிடக்கிறது. அந்த இருளுக்குள் ஆழ்ந்திருப்பது என்ன என்பதுதான் டிரில்லியன் டாலர் கேள்வி.  இதையெல்லாம் நாம் சொல்லவில்லை அறிவியல் இணைய தளத்தில் வெளியான ஆய்வு சொல்கிறது.

புதிய கிரகம்

பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.  இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வலை போட்டு மீன் பிடித்த தேசிய கவி யார் தெரியுமா?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவர். நம் நாட்டின் தேசிய கீதமான “ஜன கண மன” பாடலை எழுதிய ஒரு அற்புத கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்ல இசைப் பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால்தடம் பதித்த அற்புத மாமனிதர் ஆவார். கவிதைக்காக நோபல் பரிசு வாங்கிய ரவீந்திரநாத் தாகூருக்கு சிறு வலைபோட்டு லாவகமாக மீன் பிடிக்கும் ஆற்றல் உண்டு. வடிகட்டி மாதிரி உள்ள சின்னஞ் சிறிய வலையில் பரபரப்பான கொல்கத்தா நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைதியாக ஓடும் ‘விளிண்டா’ ஆற்றங்கரையில் அவர் அடிக்கடி மீன் பிடிக்கச்செல்வது வழக்கம்.   பிடித்த மீனை சிறிதுநேரம் உள்ளங்கையில் வைத்திருந்துவிட்டு பிறகு ஆற்றில் விடுவாராம்.

நடைபயிற்சியால் நன்மை

உயிர்கொல்லி நோயான புற்று நோயில் இருந்து உயிரை காப்பாற்ற நிபுணர்கள் புதிய வகையான சிகிச்சையை கண்டறிந்துள்ளனர். அதாவது தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் மரணத்தில் இருந்து புற்று நோயாளிகள் தப்பிக்க முடியும். இந்த ஆய்வு அமெரிக்க புற்றுநோய் சங்கம் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டது அதன்படி 992 குடல் புற்று நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் தினமும் 25 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களின் மரணம் 42 சதவீதம் குறைந்து இருந்தது. எனவே தினமும் 25 நிமிடம் நடை பயிற்சி மேற்கொண்டால் புற்று நோயாளிகள் சாவில் இருந்து தப்பிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்பிணிகள் அச்சம்

பியா...பெண்களுக்கு கர்ப்பம் குறித்த பயத்தை ஏற்படுத்தும் நோய்தான் டோகோபோபியா. இந்த நோயானது இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. முதல் வகையானது கர்ப்பம் குறித்த எந்த முன் அனுபவமும் இல்லாமல் குழந்தை பிறப்பு குறித்து பிறர் கூறுவது கேட்டு அவர்களுக்கு ஏற்படும் அச்சம். இரண்டாவது வகை முந்தைய கால கர்ப்ப காலத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக ஏற்படும் அச்சம். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களது பயத்தை போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago