முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சேலையை பெண்கள் மட்டும்தான் அணிய வேண்டுமா என்ன...

சேலையை பெண்கள் மட்டும் தான் அணிய வேண்டுமா என்ன, நாங்களும் கட்டி அசத்துவோம்ல என கிளம்பிவிட்டால் மேற்கு வங்க ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். புஷ்பக் சென் என்ற அந்த துடிப்பு மிக்க 26 வயது இளைஞர்தான் தற்போது கொல்கட்டா வீதிகளில் சென்சேஷன். ஆடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது, அது பார்ப்பவரின் தலையில்தான் இருக்கிறது என உறுதிபட சொல்கிறார். தலையில் உச்சி குடுமியும், அடர்ந்த தாடியும், கட்டுமஸ்தான உடலுமாக புஷ்பக் சென், கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் சேலை கட்டி கொல்கத்தா வீதிகளில் நடந்து செல்லும் போது அனைவரின் கண்களும் இவரையே மொய்க்கின்றன. இவர் இத்தோடு விட்டாரா வெளிநாடுகளுக்கு சென்று சேலைகளில் பேஷன் ஷோ, தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போட்டோ ஷூட் என அசத்தி வருகிறார். இவர் சேலையுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

ஸ்மார்ட் போன்

பேட்டரி என்பது ஒரு ரப்பர் போன்றது. அதனால் எவ்வளவு இழுவை தாங்க முடியுமோ அவ்வளவு மட்டும் தான் தாங்கிக் கொள்ளும். அதன் பின் அறுந்து விடும்.  இதே போல தான் பேட்டரியும் தனக்கான சார்ஜ் ஆகும் நேரம் குறைத்து வடிவமைக்கும் போது அது வெடிக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

நீருக்காக மனைவிகள்

இந்தியாவில், மஹாராஷ்டிராவில் உள்ள டென்கன்மால் போன்ற வறட்சி மிகுந்த பின்தங்கிய கிராமங்களில், தண்ணீர் சேகரித்து வருவதற்காகவே இரண்டு, மூன்று பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால்  தண்ணீர் மனைவிகள் (water wives) எனக் குறிப்பிடப்படும் அவர்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது.

சிலைகளின் நகரம் எது தெரியுமா?

கேரள மாநிலத்தில் அதிகமான சிலைகளை கொண்டுள்ள நகரம் எது என்று தெரியுமா.. அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தான் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை செயலகம் முன்பு வைக்கப்பட்ட மாதவராவ் என்பவரின் சிலையில் தொடங்கி தற்போது வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு சிலைகளின் நகரம் என்ற செல்லப் பெயரும் உண்டு

கையில் ஆபத்து

அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், மூளையில் பதிய வைக்கும் திறன் குறைந்து, நாளடைவில் படிப்படியாக முக்கியமானவர்கள் தொடர்பு எண் முதற்கொண்டு வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை ஏற்படுகிறது. இதையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தை குறைப்பது நல்லது.

84 வயது மூதாட்டி விமானம் ஓட்டி சாதனை

பர்க்கின்சன் நோய் உண்டானவர்களுக்கு மற்றவர்களைப் போல் அவர்கள் செய்யும் காரியங்களை வேகமாகவும், இயல்பாகவும் செய்ய இயலாது. பிறரின் உதவியுடன்தான் செய்ய வேண்டியிருக்கும். நம்மூர் அப்பத்தாக்களையும், அம்மாச்சிக்களையும் நாம் அவ்வாறு கண்டிருக்கிறோம். அது போன்ற 84 வயது பர்க்கின்சன்னால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு விபரீத ஆசை வந்து விட்டது. அந்த வயதிலும் விமானம் ஓட்ட வேண்டும் என்பதுதான் அது. அமெரிக்காவைச் சேர்ந்த Myrta Gage என்ற 84 வயது மூதாட்டிதான் அவர். அவர் முன்னாள் விமான பைலட் என்பது கூடுதல் சுவாரசியம். எனவே அந்த வயதிலும் தன்னம்பிக்கை தளராமல் விமானத்தில் ஏறி விட்டார். நம்மூராக இருந்தால் விமான நிலைய வாசல் பக்கம் கூட அண்ட விட அனுமதித்திருக்க மாட்டோம்.  அவரது மகன் Earl தனது தாயார் விமானம் ஓட்டும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.Cody Mattiello என்ற விமானியை தொடர்பு கொண்டு  Earl தனது தாயாரின் ஆசையை தெரிவித்துள்ளார். அவரது உதவியுடன் Lake Winnipesaukee மற்றும் Mount Kearsarge ஆகிய பகுதியில்  Myrta Gage விமானத்தை ஓட்டி அசத்தியுள்ளார். தள்ளாத வயதிலும் தளராம் விமானம் பெண் விமானம் ஓட்டும் அவருக்கு பாராட்டுகள் குவின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago