எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணை செய்ய பாகிஸ்தான் குழு இந்தியா வந்துள்ளது. அந்த குழுவில் பாகிஸ்தானின் உளவுதுறையான ஐ.எஸ்.ஐ.யின் அதிகாரி ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளம் பாகிஸ்தான் எல்லைக்கு 35 கிலோ மீட்டர் அருகாமையில் உள்ளது. இந்த விமானப்படை தளத்திற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பின் 6 தீவிரவாதிகள் கடந்த ஜனவரி மாதம் 2ம்தேதியன்று வந்தனர். அவர்கள் இந்திய ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து வந்தார்கள். இதனால் அவர்கள் தீவிரவாதிகள் என்பதை விமானப்படையினரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்களில் ஈடுபட்டார்கள். இதில் 7 இந்திய வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர்.
தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. அந்த அழைப்புகளை கண்காணித்த இந்திய உளவுத்துறை இது குறித்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளித்தது. இதன் பேரில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஇந்திய அரசு வலியுறுத்தியது.
இந்த நிலையில் பதன் கோட் தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு பாகிஸ்தானில் இருந்து ஒரு குழு டெல்லிக்கு நேற்று வந்தது. அந்த குழுவில் மொத்தம் 5பேர் உள்ளனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் அதிகாரி ஆவார். அந்த குழுவினர் இந்திய புலனாய்வுத்துறையினர் (என்.ஐ.ஏ)நடத்திய விசாரணை விவரங்களையும் ஆய்வு செய்கிறார்கள்.
பாகிஸ்தான் விசாரணைக்குழுவை என்.ஐ.ஏ. அதிகாரிகளும் டெல்லியில்உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் வரவேற்றார்கள். அந்த குழுவினர் செவ்வாய்கிழமையன்று பதன் கோட் விமானப்படை தளத்திற்கு செல்கிறார்கள். பாகிஸ்தான் விசாரணைக்குழுவினர் பாகிஸ்தானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு வந்துள்ளனர்.
இந்த குழுவில் பாகிஸ்தான் பஞ்சாப் தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் முகமது தாகிர் ராய், லாகூர் உ ளவுத்துறை துணை டைரக்டர் ஜெனரல் முகமது ஆசிம் அர்ஷாத், ஐ.எஸ்.ஐ. அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தன்வீர் அகமது, ராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் இர்பான் மிர்சா மற்றும் குஜ்ரன் வாலா தீவிரவாத தடுப்பு துறையின் அதிகாரி ஷாகித் தன்வீர் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் விசாரணைக்குழு என்.ஐ.ஏ தலைமையகத்திற்கு இன்று காலை செல்கிறது. அங்கு 90நிமிடம் பதன் கோட் தாக்குதல் விசாரணை குறித்த விவரங்களை என்.ஐ.ஏ . அதிகாரிகள் விளக்குகிறார்கள். மதியத்திற்கு பின்னர் பாகிஸ்தான் குழுவினர் தங்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
பதன் கோட் தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் போலீஸ் சூப்பிரண்டு சல்விந்தர் சிங் , அவரது நகை விற்பனை நண்பர் ராஜேஷ்வர்மா, மற்றும் சமையல்காரர் மதன் கோபால் மற்றும் காயமடைந்த 17பேர் பாகிஸ்தான் விசாரணைக்குழுவினரிடம் தங்கள் சாட்சி வாக்குமூலங்களை அளிக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.