எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை - இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் உள்ளிட்ட எந்தப் பொருளாக இருந்தாலும் இறைவனுக்குத்தான் சொந்தம். அந்தப் பொருட்களுக்கு பூசாரிகள் உரிமை கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது. மதுரை பாண்டிமுனீஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் ஆடுகள், சேவல்களை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி பூசாரிகள் இருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை பாண்டிமுனீஸ்வரர் கோயில்
மதுரை சுற்றுச்சாலையில் உள்ள புகழ்பெற்ற பாண்டி முனீஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ஆடு, சேவல்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குகின்றனர். இவ்வாறு காணிக்கையாக வரும் ஆடு, சேவல்களை கோயிலின் வருமானத்தை பெருக்கும் வகையில் ஏலம் விடுவது தொடர்பாக அறநிலையத் துறை கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் கோயிலில் பல்வேறு சேவைகளுக்கு டிக்கெட் முறையை அறநிலையத் துறை அறிமுகம் செய்துள்ளது.
நாங்கள் தான் மத்தியஸ்தர்கள்
இவற்றுக்கு எதிராக கோயில் பூசாரிகள் பி.எம். பாண்டிய ராஜன், வி.கே.பாண்டியன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், இறைவனுக்கும், பக்தர்களுக்கும் மத்தியஸ்தராக பூசாரிகள் உள்ளனர். இதனால் இறைவனுக்கு காணிக்கையாக வழங்கப்படும் பொருட்களை அனுபவிக்க பூசாரிகளுக்கு உரிமை உண்டு. பூசாரி என்பவர் பக்தர்களின் துன்பங்கள், துயரங்களை தன்னுள் வாங்கிக்கொண்டு, அதற்கு பதிலாக இறைவனின் ஆசியை பக்தர்களுக்கு வழங்குகின்றனர். பூசாரிகளின் இந்த சேவையை கவுரவிக்கும் விதமாக பக்தர்கள் பணம்,
பறவைகள், பிராணிகளை வழங்குகின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை வணிகமயமாக்கும் நோக்கத்தில் அறநிலையத் துறை ஆணை பிறப்பித்திருப்பது காலம் காலமாக பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பாரம்பரிய உரிமையில் தலையிடுவதாகும். மேலும் கோயில் சேவை களுக்கு டிக்கெட் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயில் வருமானத்தில் பூசாரிகளின் பங்கை முடிவு செய்யாமல் டிக்கெட் முறையை அறிமுகம் செய்ய அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை என மனுவில் கூறப்பட்டி ருந்தது. இந்த மனு உயர் நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் வாதிடும்போது, கோயிலின் மொத்த உண்டியல் வசூலில் பூசாரிகளுக்கு 50 சதவீத வருமானம் வழங்கப்படுகிறது என்றார்.
பூஜாரிகளுக்கு பங்கு இல்லை
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு : பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் ஆடு, கோழிகளை ஏலம் விடுவது தொடர்பாக அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை எதிர்த்து கோயில் பூஜாரிகள் என்ற முறையில் கேள்வி கேட்பதற்கு மனுதாரர்களுக்கு உரிமை கிடையாது.
மனுக்கள் தள்ளுபடி
பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் பணம் உட்பட எந்த பொருளாக இருந்தாலும் அது இறைவனுக்கு சொந்தமானது. காணிக்கையாக வழங்கும் பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பூஜாரிகளுக்கு பங்கு இல்லை. இறைவனுக்கு காணிக்கையாக வழங்கப்படும் பொருட்கள் பூஜாரிகளின் சொத்து ஆகாது. எனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள் ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.