எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இலந்தைப்பழத்தின் தாயகம் சீனா, இதனை ஆங்கிலத்தில் ஜூஜூபி என அழைப்பர். இந்தப்பழத்தின் மேல் தோல் நல்ல சிவப்பு நிறத்துடன் மினுமினுப்பாக இருக்கும். இதன் அளவு சுண்டைக்காய் அளவு பெரியதும், சிறியதுமாக இருக்கும். இலந்தைப்பழத்தின் மேலுள்ள தோல் மெல்லியதாக இருந்தாலும் உறுதியானதாக இருக்கும். இந்தப்பழத்தின் சுவை இனிப்பும், புளிப்பும் கலந்து இருக்கும். இலந்தைக்கனி மிக அதிகமான மருத்துவகுணம் கொண்ட ஒரு கனியாக விளங்குகிறது. 100 கிராம் இலந்தையில் 74 சதவிகிதம் கலோரி, 17 சதவிகிதம் மாவுப்பொருள், 0.8 சதவிகிதம் புரதம் மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
இலந்தைப்பழம் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம். இலந்தைப்பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவ சக்திகள் உள்ளது. இதன் இலையை மைபோல அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெறலாம். கட்டிகள் மீது இந்தக்கலவையை வைத்து கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். முடியிலுள்ள புழுவெட்டு நீங்கும். இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, கால்களில் தினமும் பூசி வர அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும். உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற பல நோய்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.
மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்த சீர்கேடு உண்டாகும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் எலும்பு, பற்களுக்கு உறுதி உண்டாகும். உடலில் பலம் ஏறும். இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண்கள் ஆறும். பகல் உணவிற்கு பிறகு இலந்தைப்பழத்தை உட்கொண்டால் செரிமானம் உண்டாவதுடன் பித்தமும் கபமும் சாந்தமுறும். பழத்தை உலர்த்தி கொட்டையை நீக்கி உட்கொண்டால் கபத்தை வெளிக் கொண்டு வரும்.
இலந்தை மரத்தின் வேரை அரைத்துப் பூச, மூட்டுவலி குணமாகும். வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15மி அளவு குடிக்க மலச்சிக்கல் குணமாகும். உடலில் சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் லேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடையும். கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் இலந்தைப்பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். தினமும் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும். பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப்பழம் பயன்படுகிறது.
கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும். சிலருக்கு அடிக்கடி உடல்வலி, உடல் சோர்வு ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப்பழம் நல்ல மருந்தாகும். பசியில்லாமல் அவதிப்படுபவர்களுக்கும், சிறிது சாப்பிட்டால் கூட செரிமானம் ஆகாமல் இருப்பவர்களும் இலந்தைப்பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி வைத்துக்கொண்டு, காலையும் மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கவும் செய்யும். பேருந்தில் பயணம் செய்யும் போது வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படுவோர் இலந்தைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 days ago |
-
பாக்.கில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
30 Apr 2025லாகூர் : பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
-
நெல்லை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
30 Apr 2025நெல்லை : நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கார்மேகனார் தெருவை சேர்ந்த ரத்தினபாண்டி மகன்
-
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசு
30 Apr 2025புதுடெல்லி : தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் மத்திய அரசு உத்தரவிட்டது.
-
உழைப்பாளர் தினத்தையொட்டி மதுக்கடைகள் அடைக்க உத்தரவு
30 Apr 2025சென்னை : உழைப்பாளர் தினத்தையொட்டி இன்று மதுக்கடைகள் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி
30 Apr 2025கைபர் பக்துன்குவா : பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவாவில் குணடு வெடிப்பி்ல் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
-
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
30 Apr 2025சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
ஜே.பி.நட்டா மே 3-ல் தமிழகம் வருகிறார்
30 Apr 2025சென்னை : பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரும் மே 3ம் தேதி சென்னை வருகிறார். சென்னைக்கு வரும் அவர் மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு
30 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நேற்று பொறுப்பேற்றார்.
-
ஆந்திராவில் கோவில் சுவர் இடிந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
30 Apr 2025புதுடெல்லி, கோவில் சுவர் இடிந்து 9 பேர் பலியான விவகாரத்தில் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை
30 Apr 2025நியூயார்க் : அமெரிக்காவின் நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (45), தனது மனைவி சுவேதா (41) மற்றும் 14
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அமைத்து விஜய் உத்தரவு
30 Apr 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை : தமிழக அரசு அறிவிப்பு
30 Apr 2025சென்னை : நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஈரானில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: இஸ்ரேல் உளவாளிக்கு மரண தண்டனை
30 Apr 2025ஈரான் : ஈரான் நாட்டில் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுக்காக உளவு பார்த்தாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க உத்தரவு
30 Apr 2025சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழ
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் தவறுதான்: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
30 Apr 2025பெங்களூரு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகத்திற்கு சமம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு
30 Apr 2025கொல்கத்தா : மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
-
தோனி ஓய்வு: கில்கிறிஸ்ட்
30 Apr 2025சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.
-
பஹல்காம் தாக்குலில் பலியானவரின் குடும்பத்தினரை நேரில சந்தித்து ராகுல் ஆறுதல்
30 Apr 2025பஹல்காம் : பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வீரர்களை இறுதி செய்வதில் தீவிரம் காட்டும் பி.சி.சி.ஐ.
30 Apr 2025மும்பை : இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
-
மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு
30 Apr 2025நெல்லை, மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்க
-
ராஜஸ்தானில் பயங்கரம்: கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பலி
30 Apr 2025அல்வார் : ராஜஸ்தானில் 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அடுத்த போப் ஆண்டவர் நான் தான்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நகைச்சுவை
30 Apr 2025வாஷிங்டன் : அடுத்த போப் ஆண்டவர் நான் தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
-
ரஹானே, அக்ஷர் பட்டேல் காயம்
30 Apr 2025கொல்கத்தா : கொல்கத்தா - டெல்லி இடையிலான போட்டியில் கேப்டன்கள் ரஹானே, அக்ஷர் பட்டேல் இருவரும் காயமடைந்தனர்.
-
ஈரான் துறைமுக வெடி விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆனது
30 Apr 2025தெஹ்ரான் : ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது. இது ஈரானின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் ஆகும்.
-
தனியார் பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
30 Apr 2025மதுரை : மதுரையில் தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.