எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாவரவியல் ரீதியாக அசோலா ‘அசோலேசியே’ என்னும் குடும்பத்தை சார்ந்த தண்ணீரில் மிதக்கும் ஓர் பெரணி செடி ஆகும். அசோலாவின் இலைகள் முக்கோண வடிவிலோ அல்லது பலகோண வடிவத்திலோ அமைந்து பார்ப்பதற்கு மூக்குத்தி மற்றும் கம்மல் போன்று இருப்பதால் இதனை மூக்குத்தி செடி அல்லது கம்மல் செடி என ஊர்புறங்களில் அழைக்கப்படுவதுண்டு. அசோலா மிகச்சிறிய இலைகளையும் மெல்லிய வேர்களையும் கொண்டது.
இதன் தண்டு மற்றும் வேர்ப் பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும். அசோலாவின் உள்ளே ‘அனபினா அசோலே’ என்ற நீலப்பசும்பாசி உள்ளது. நீலப்பசும்பாசி வளர்வதற்கு தேவையான உண வினை அசோலா கொடுக்கிறது. இந்த நீலப்பசும்பாசி காற்றில் உள்ள தழைச் சத்தினை (நைட்ரஜன்) கிரகித்து அசோலாவில் சேமித்து வைக்கிறது. இதனால் அசோலா கால்நடைகளுக்கு புரதம் நிறைந்த சத்தான உணவாக பயன் படுத்தப்படுகிறது.
அசோலாவின் தனிச்சிறப்புகள்
1. அசோலாவை எளிய முறையில் உற்பத்தி செய்யலாம். துரித வளர்ச்சித் திறனும் கொண்டது.
2. அசோலாவை பசுமையாகவோ அல்லது உலர்த்தியோ கால்நடைகள் மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.
3. அசோலாவில் 25-35 சதவீதம் புரதச்சத்து 10-12 சதவீதம் தாதுக்கள் மற்றும் 7-10 சதவீதம் அமினோ அமிலம் மற்றும் இதனை சார்ந்த வளர்ச்சிதை மாற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.
4. பொதுவாக தாவர இலைகளில் மிகுந்து காணப்படும் டானின் என்ற நச்சு அசோலாவில் மிகவும் குiவாக காணப்படுவதால் இது ஒரு சிறந்த கால் நடைத் தீவனமாக விளங்குகிறது.
5. அசோலா கால்டை மற்றும் கோழிகளின் உடல் நலத்திற்கு அவசியமான அமினோ அமிலங்களை கணிசமான அளவில் உள்ளடக்கி இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
அசோலா உற்பத்தி முறை : அசோலா குறைந்த வெப்பநிலையில் (25 முதல் 31 சென்டிகிரேட்) வளரும் தன்மை கொண்டதால் நிழலில் வளர்க்க வேண்டும். மர நிழலில் வளர்க்கும் போது சூரிய ஒளியானது அசோலா மீது மூன்று மணி நேரத்திற்கு மேல் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
படி-1: நிலத்தில் உள்ள களைச்செடிகளை அகற்றி நிலத்தைச் சமப்படுத்த வும் பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி 10. செ.மீ. உயரம். 2.25 மீ நீளம், 1.5 மீ அகலம் வரும்படி செங்கலை அடுக்கவும். புல் பூண்டுகள் வளர்வதை தடுக்கவும், சிறு கற்களால் சில்பாலின் சீட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் யூரியா சாக்கினை குழியில் பரப்பவும்.
படி- 2: பின்னர் 2.5 மீ நீளம், 1.8 மீ அகலம் உள்ள சில்பாலின் சீட்டை செங்கலின் மேல் சமமாக பரப்பவும். (150 தடிமன்களுக்கு மேல் உள்ள சில்பாலின் சீட்டை பயன்படுத்தவும்).
படி-3: சில்பாலின் மீது சுமார் 30-35 கிலோ நன்கு சலித்த வளமான மண்ணை சமமாக பரப்பவும்.
படி-4: இருநாட்களுக்கு முந்தையதாக இல்லாத சாணம் சுமார் 4-5 கிலோ அல்லது அதே அளவான சாண எரிவாயுக்கலனில் இருந்து வெளிவரும் கழிவை, 15-20 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். பின்னர் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீர் கரைத்து குழியில் ஊற்ற வேண்டும்.
படி-5: அசோலா குழியில் 10 செ.மீ உயரம் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். இரசாயன கழிவுகள் இல்லாத கழிவுநீர் மற்றும் மாட்டுத் தொழுவத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரையும் அசோலா வளர்ப்பதற்கு பயன்படுத்தலாம்.
படி-6: சுமார் 1-1.5 கிலோ நோய் இல்லாத, பூச்சித்தாக்குதல் இல்லாத அசோலாவை (இதை விதை அசோலா என சொல்லலாம்) எடுத்து தண்ணீரின் மேல் எல்லா இடங்களிலும் சமமாக பரவும்படி தூவவும். ஒரு சில அசோலா பெரணிகள் தலைகீழாக விழுந்து இருந்தால் அவற்றின் மேல் சிறிதளவு நீரை தெளித்தால் போதும். அவை நேராகி விடும்.
படி-7: அசோலா விதைத்த 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும். நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை தினந்தோறும் அறுவடை செய்யலாம்.
பராமரிப்பு:- தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும், ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதற்கு பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலி;த வளமான மண்ணை இட வேண்டும். அசோலா விதைகளை தவிர ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து இருபொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.
அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கும் முறையும் அதன் பயன்களும்:- 1 சதுர செ.மீ. துளை உள்ள பிளாஸ்டிக் டிரே கொண்டு அரித்து எடுத்த அசோலாவை பாதியளவு தண்ணீர் கொண்ட பிளாஸ்டிக் பக்கெட்டினுள் போடவும். பின்னர் சாணத்தின் வாசனை போகும் அளவு நன்றாக கழுவவும். அசோலாவை கழுவ பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் அசோலா பாதியிலேயே விட்டு விடலாம்.
இவ்வாறு நன்கு கழுவிய அசோலாவை 1:1 என்ற விகிதத்தில் செயற்கை தீவனங்களோடு கலந்து கால்நடைகளுக்குக் கொடுக்க ஆரம்பிக்கலாம். கோழி களுக்கு அசோலாவை அப்படியே உண்ண கொடுக்கலாம். இருந்தாலும் நாம் எப்போதும் கொடுக்கும் தீவனங்களோடு சேர்த்து கொடுக்க ஆரம்பித்து அவை பழக பழக தீவன அளவை குறைத்து அசோலா அளவைக் கூட்டிக்கொண்டெ வரலாம். கால்நடைகள் அசோலாவை நன்கு சாப்பிடப் பழகிய பின்னர் செயற்கைத் தீவ னங்கள் சேர்க்காமலேயே நேரடியாக அசோலாவையே கொடுக்கலாம்.
பரிந்துரைக்கப்படும் அசோலாவின் அளவுகள் : கால்நடை ஒன்றிக்கு அசோலாவின் அளவு (நாள் ஒன்றுக்கு), பசுமாடு, உழவுமாடு -1.5 - 2 கிலோ, முட்டை மற்றும் இறைச்சி கோழி, வான்கோழி 20-30 கிராம், ஆடு -300-500 கிராம், வெண்பன்றி 1-1.5 கிலோ, முயல் 100 கிராம்,
பயன்கள் : கறவை மாடுகளில் பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்ப துடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலில் கொழுப்புச்சத்து 10 சதவீதம் வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல்லாத திடப்பொருளின் அளவும் 3 சதவீதம் வரை கூடுகிறது.
அசோலா உட்கொள்ளும் கால்நடைகள் மற்றும் கோழிகளின் எடை கூடுகிறது. கோழிகளின் முட்டையில் உள்ள மஞ்சள் கரு திடமாக காணப்படும்.
கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அசோலாவை தீவனமாக அளிக்கும் போது 20 விழுக்காடு வரை அடர் தீவனத்தை சேமிக்கலாம்.
அசோலாவில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு : பொதுவாக அசோலாவை பூச்சி மற்றும் நோய்கள் அதிகம் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி மற்றும் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மி.லி. வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.
தொகுப்பு : ஜெயந்தி, ரவி மற்றும் மருத்துவர் ஸ்ரீபாலாஜி, சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.