எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் முன்பட்டம் என்று சொல்லகூடிய டிசம்பர் – ஜனவரி மாதங்களில் தான் கரும்பு சாகுபடி 70 சதவீதத்திற்கும் அதிகமாக பயிரிடப்படுகிறது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதால் கிணறு மற்றும் நீர் நிலைகளில் நீர் இருப்பு இருக்கும். ஆதலால் பணப்பயிரான கரும்பு சாகுபடி எளிதாகிறது. மேலும் முன்பட்ட பருவ சாகுபடி செய்வதால் ஏற்படும் பலன்கள்.
1. கரும்பின் முளைப்பிற்கு இதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் கரும்பில் முளைப்புத்திறன் அதிகமாகிறது.
2. பருவமழை காரணமாக நட்ட மூன்று மாதங்களுக்கு நீர்பாய்ச்ச தேவையில்லை.
3. இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் அறவே இல்லை.
4. கிணற்றில் நீர் குறைந்தாலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீர் பாய்ச்சி விதை கரும்பு ஆக வெட்ட வாய்ப்பு.
5. பயிர் பராமரிப்பு ஆட்கள் எளிதாக கிடைக்கும் வாய்ப்பு.
6. அடுத்த அரவைப்பருவத்தில் கரும்பை முன்னதாக வெட்ட வாய்ப்பு இருப்பதால் குறித்த காலத்தில் பணம், மற்றும் வெட்டு ஆட்கள் எளிதாக கிடைக்கும் அரிய வாய்ப்பு.
7. பண்டிகை காலமாதலால் கரும்பிற்கு தேவை அதிகம்.
சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களுக்கு ஏற்ற இரகங்கள் : CO.0212, CO86032
நடவு முறைகள்:
1. கரணை மூலம் நடவு.
2. ஒரு பருச்சீவல்கள் மூலம்.
விதைக்கரணை தேர்வு :
1. 6 மாத கரும்பில் இருந்து மட்டுமே விதைக்கரணை தேர்வு செய்ய வேண்டும்.
2. பூச்சிநோய் தாக்காத விதைகரும்புகளை தேர்வு செய்தல் வேண்டும்.
3. மறுதாம்புக்கரும்பில் இருந்து விதைக் கரணை தேர்வு செய்யக்கூடாது.
4. தொலைதூரம் எடுத்துச்செல்வதாய் இருந்தால் தோகை உரிக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
விதைக்கரணைகளின் அளவு:
1. கரணை மூலம் நடவு செய்ய 30,000 இருபருக்கரணைகள் / ஏக்கருக்கு
2. ஒரு பருச்சீவல்கள் மூலம் நடவு ( நீடித்த நவீன கரும்பு சாகுபடி) ஏக்கருக்கு 65௦௦ நாற்றுக்கள்.
கரணை நேர்த்தி: விதைக்கரணைகளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் பெவிஸ்டின், 5 மில்லி குளோர் பைரிபாஸ் 5gm சுண்ணாம்பு, 5 கிராம் யூரியா கலந்த கரைசலால் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும், பவிஸ்டின் பூஞ்சான நோய்களிலிருந்தும் குளோர் பைரிபாஸ் சாறு உறிஞ்சும் பூச்சிகளிளிருந்தும், சுண்ணாம்பு வறட்சியை தாங்கவும், யூரியா முளைப்புதிறனை கூட்டவும் உதவுகிறது.
நடவு முறை: 3 அடிக்கு ஒரு பார் பிடித்து கொண்டு கரணைகளை வயலில் தண்ணீர் பாய்ச்சியபின் பார்களின் பக்கவாட்டில் இருக்கும்படி பதித்தல் வேண்டும், கரணைகளை வாய்க்காலில் பதிக்கக்கூடாது, வாய்க்காலில் பதிப்பதால் மழைக்காலமாதலால் தண்ணீர் தேங்கி கரணை அழுகல் நோய் ஏற்பட ஏதுவாகி முளைப்புதிறன் பாதிக்கப்படும்.
களைக்கொல்லி தெளித்தல்: கரும்பில் முதல் மூன்று மாதங்கள் களைகளின் தாக்கம் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றிட வாய்ப்பாக அமைந்துவிடும். நட்ட 3 ஆம் நாள் களை முளைபதற்க்கு முன்பு தெளிக்கக்கூடிய களைக் கொல்லியான அட்ரசீன் என்ற களைக்கொல்லியை 1 kg எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்கப்பட்ட களைக்கொல்லி காலின் பாதத்தில் படாதவாறு பின்னோக்கி நடந்து தெளித்து வரவேண்டும். இது நட்ட 30 நாட்களுக்கு கோரை, அருகு தவிர அனைத்து களைகளையும் கட்டுபடுத்தும்.
அடி உரம்: மண் பரிசோதனைப்படி மட்டுமே உரமிடல் வேண்டும், மண்பரிசோதனை செய்ய இயலாத நிலையில் ஏக்கருக்கு 4 மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தை பார்களின் சால்களில் தூவி நட வேண்டும். தொழுஉரம் ஏக்கருக்கு 5 டன் இடுதல், இரசாயன உரங்கள் பயிர் எடுத்துகொள்ள ஏதுவாவதுடன், மண்வளம் மேம்பாடு அடைகிறது.
உரப்பரிந்துரை : 110 : 25 : 45 தழை, மணி சாம்பல் சத்துகளை தரக்கூடிய உரங்களை 1 ஏக்கர் பயிருக்கு இடவேண்டும்.
களை எடுத்தல்: நட்ட 3௦ ஆம் நாள் ஏக்கருக்கு 1 மூட்டை யூரியாவை இட்டு லேசாக மண் அணைக்க வேண்டும், உடன் தண்ணீர் பாய்ச்சுதல் நல்லது.
இரண்டாவது களை எடுத்தல்: நட்ட 6௦ வது நாளில் ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா 1 மூட்டை பொட்டாஷ் உடன் வேப்பம் புண்ணாக்கு 5௦ kg கலந்து களை எடுத்து லேசாக மண் அணைக்க வேண்டும்.
மூன்றாவது களை எடுத்தல்: நட்ட 9௦ ஆம் நாள் 2 மூட்டை யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் ஏக்கருக்கு இட்டு நன்றாக மண் அணைத்தல் வேண்டும். இதற்கு மேல் தாமதப்படுத்தினால் போத்துக்கள் வளர்ந்து சர்க்கரை கட்டுமானம் பாதிக்கப்படும்.
வளர்ந்த களைகளை கட்டுப்படுத்த : எதிர்பாராத காரணங்களால் 2 மற்றும் 3 வது களை எடுக்க முடியாமல் போனால் வளர்ந்த களைகளை கட்டுப்படுத்த METRIBUZINE 1 KG + 2-4 D 600 gm கலந்து வளர்ந்த களைகளின் மீது தெளிப்பதால் களைகள் மட்டுப்படுத்தப்படும்.
தோகை உரித்தல்: நட்ட 5 வது மாதத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்தவும், மகசூலை அதிகரிக்கவும், பின்பருவ நேர்த்திகளை செய்யவும் தோகை உரித்தல் அவசியமாகிறது. தோகைகளை கால்நடைத்தீவனமாகவும், கூரை வேயவும் பயன் படுத்தலாம்.
விட்டம் கட்டுதல்: 7 வது மாதத்தில் கரும்பு சாயாமல் இருக்க, எலி மற்றும் அணில் போன்றவற்றின் சேதத்தை தவிர்க்க விட்டம் கட்டுதல் அவசியம், கரும்பை வெட்டுவதும், வெட்டுக்கூலி குறையவும் வாய்ப்பு.
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்: கரும்பு நட்ட 45, 60, 75 நாட்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கரும்பு பூஸ்டரை 1, 1 ½ , 2 kg அளவுகளை 200 lit தண்ணீரில் கலந்து தெளிக்க மகசூல் 2௦ சதவீதம் கூடும்.
அறுவடை : நட்ட 11-12 மாதங்களில் கரும்பு அறுவடைக்கு வந்துவிடும். கரும்பை கைக்கோடாரி கொண்டு அடியோடு வெட்டுவதால் அடிக்கரும்பில் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பதால் ஆலையின் கட்டுமானம் கூட வாய்ப்பாகும், மேலும் 5 டன்கள் கரும்பு ஏக்கருக்கு மகசூல் கூட வாய்ப்பாக அமையும். கரும்பை வெட்டியபின் தோகையை தீயிட்டு எரிக்காமல், தோகைகளை கரும்பு தோகை கம்போஸ்டாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கலாம்.மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு கரும்பு மகசூலை அதிகரித்து விவசாயிகள் வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள்.
கோ.செந்தில்நாதன்,முனைவர் பா.கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர்.
வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636203.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.


