முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரனுக்கு ஐ.சி.சி. விதித்த தடை

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லக்னோ : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரனுக்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் செய்த போது, நிக்கோலஸ் பூரன் பந்தை பளபளப்பாக்க தொடைப்பகுதியில் தேய்த்தார். அப்போது கை பெருவிரலால் பந்தின் மேற்பகுதியை சேதப்படுத்தினார்.

இது கேமராவில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இதனால் பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது நடுவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நடுவர்கள் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. இதனால் அடுத்த நான்கு டி - 20 போட்டிகளில் அவர்களால் விளையாட இயலாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து