முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 1404 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,83,319-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,   தமிழகத்தில் மேலும் 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,83,319 ஆக அதிகரித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,60,617 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று மட்டும் 1,411 பேர் குணமடைந்துள்ளனர்.   தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,722 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் நேற்று  ஒரே நாளில் 380 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,15,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

தமிழகத்தில் இதுவரை 1,21,25,059 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 65,058 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.   

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 221 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 10,980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து