முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

புதன்கிழமை, 5 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், ஐகோர்ட் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் தீவிரமாக உள்ளது. கொரோனா தொற்று ஒருவரின் உமிழ்நீரால் பரவுகிறது. கொரோனா தொற்றால் நடுத்தர வயதுடையவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிகமாகக் கூடுவதற்குத் தடை விதிப்பது, அத்தியாவசியமற்ற பெரும் வணிக நிறுவனங்களைத் திறக்கத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதுமானது. இரவு நேர ஊரடங்கால் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்தும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், கோழி மற்றும் இறைச்சிக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கவும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட இணைப்புச் சாலைகளில் டீக்கடை, ஓட்டல், நான்கு சக்கர வாகனப் பழுது நீக்கும் கடைகள், பஞ்சர் கடைகளைத் திறக்கவும், இரவு நேரங்களில் 50 சதவீதப் பயணிகளுடன் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், அங்கு பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து