முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கையை அழித்து வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள கூடாது தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 15 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சென்னை: இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது எனத் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்தை அமல்படுத்துவதற்காக, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம், செங்கல்பட்டு மாவட்டம், படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி எனும் ஏரியை மணல் மூலம் நிரப்புவதாகவும், இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், படூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த தாசில்தாரருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளதாகவும், ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

 

நீர்நிலைகளை மாநில அரசு ஆக்கிரமிக்கக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், நீர்நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதிலாக, மேல்நிலை சாலை அமைக்கலாம் எனவும், இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். பின்னர், வழக்கு தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து