முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சலில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம்

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இமாச்சல பிரதேச மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கங்க்ரா, மண்டி, சம்பா, பிலாஸ்ப்பூர், சோலன், சிர்மூர், குல்லு மற்றும் சிம்லா ஆகிய மாவட்டங்களில் இன்று 18-ம் தேதி முதல் 20 வரை கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மஞ்சள் அலர்ட்டைக் காட்டிலும் ஆரஞ்சு அலர்ட் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மாநிலத்தில் 22-ம் தேதி வரை மழையின் தாக்கம் இருக்கும் என மேலும் கூறப்பட்டுள்ளது.  இந்த வார துவக்கத்தில் பாக்சு நாக் பகுதியில் பலத்த மழையின்போது பள்ளிகள், விடுதிகளில் மழை நீர் புகுந்தது.  கொரோனா மூன்றாவது அலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்த போதிலும், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். மழை நிற்கும் வரை, சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து