முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புவனேஷ்வர்: வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு(டி.ஆா்.டி.ஓ.) வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

பாதுகாப்புத் துறையைச் சோந்த நிறுவனங்களுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ. தயாரித்துள்ள ஆகாஷ் என்.ஜி ஏவுகணை ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து நேற்று ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. சோதனையின் போது திட்டமிடப்பட்ட 30 கி.மீ தூர இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி இலக்கை அழித்தது.

2.5 மாக் வேகத்தில் செல்லக்கூடிய ஆகாஷ் ஏவுகணை(ஆகாஷ்-என்.ஜி.) தரைப்பரப்பிலிருந்து 60 கி.மீ. தொலைவு வரை விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. கடந்த 3 நாள்களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மேற்கொண்ட மூன்றாவது ஏவுகணை சோதனை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து