முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறக்குமதி காருக்கு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் மனு : இன்று விசாரணை

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015-ல் தாக்கல் செய்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்கத் தடை விதித்து, கேரள ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.  கேரள ஐகோர்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில், சுப்ரீம் கோர்ட், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019-ல் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி, நடிகர் தனுஷ், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.  காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், 50 சதவீத வரியைச் செலுத்தும்பட்சத்தில் காரைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.

அதன்பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5-ம் (இன்று) தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி, வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த ஐகோர்ட், அவரை விமர்சித்திருந்த நிலையில், தற்போது தனுஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து