முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: வைகை அணை நீர்மட்டம் உயர்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 10 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஆண்டிபட்டி : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 9 நாட்களில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயர வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீருக்கும், பாசனத்திற்கும் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழையால், சில மாதங்களுக்கு முன், அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், நீர்வரத்தும் குறைந்தது. மேலும் நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருந்ததால், அணை நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. 

இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால், அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 1-ம் தேதி 53.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 55.77 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 9 நாட்களில் நீர்மட்டம் சுமார் 3 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து