முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - திருவள்ளூருக்கு சைக்கிளிங் சென்ற டி.ஜி.பி. - காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு டிஜிபியாக பொறுப்பேற்றது முதல் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் தனது பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,  சென்னையில் இருந்து நேற்று காலை திருவள்ளூருக்கு சைக்கிளிங் சென்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு அங்குத் தீயணைப்புத் துறை வீரர்களைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென ஆய்வு செய்தார். அங்குக் கோப்புகள் முறையாகப் பாதுகாக்கப்படுகிறதா, எஃப்.ஐ.ஆர். உரிய விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்யப்படுகிறதா போன்றவற்றை அவர் ஆய்வு செய்தார். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கம்பியூட்டர் அறை, ஆய்வாளர் அறைகளுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார்.

அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த அவர், போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து காவலர்களின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்த அவர், போன் பறிப்பு உள்பட குற்றச் சம்பவங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து காவலர்களின் கோரிக்கைகளான பணியிட மாற்றம் மற்றும் இதர குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து நேரடியாக போலீஸ் குடியிருப்புக்குச் சென்ற அவர், அங்குள்ள போலீஸ் குடும்பங்களைச் சந்தித்து போலீஸ் குடியிருப்பு வசதிகள், சரி செய்ய வேண்டிய குறைகள் ஆகியவை குறித்து விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் அங்கிருந்த குழந்தைகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அவர்களுக்குப் புத்தகங்களையும் பரிசாக வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து