Idhayam Matrimony

ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டு கழக தலைவராக மதிவாணன் நியமனம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உ.மதிவாணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது குறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.  தாட்கோவின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், மேம்பாட்டுப் பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக திரு. உ. மதிவாணனை நியமித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆணையிட்டுள்ளார். 

 

மதிவாணன், பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்ற  வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 2001 வரை திருவாரூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், 2006 முதல் 2011 வரை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழக பால்வளத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்த நீண்ட அனுபவம் கொண்டவர் ஆவார்.   மேலும், கடந்த 2016 முதல் 2021 வரை கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு,  திருவாரூர்  மற்றும் கீழ்வேளுர் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து