தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
குஜிலியம்பாறை : வேடசந்தூர் தொகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் காவிரி நீரை நிரப்பும் திட்டத்தின் மூலம் வறட்சியான தொகுதி வளமான தொகுதியாக மாறும் என்று எம்.எல்.ஏ காந்திராஜன் தெரிவித்தார்.
பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ காந்திராஜன் தலைமை வகித்து வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார். இராமகிரி ஆர்.சி. காலணி மற்றும் கூட்டக்காரன்பட்டியில் தலா 4.50லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் மினி டேங்க் மோட்டர் பொருத்துதல் வீரக்கவுண்டன்பட்டி மற்றும் சாணிபட்டியில் தலா ரூ10 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் மேல் நிலைத் தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ காந்திராஜன் பேசும் போது தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்திலே வேடசந்தூர் தொகுதி மிகவும் வறட்சி பகுதி வேடசந்தூர் தொகுதியில் உள்ள 183குளங்களும் பெரும்;பான்மையாக வருடம் முழுவதும் வறண்டு கிடக்கிறது இதனால் இத்தொகுதியில் உள்ள மக்களுக்கு மழையை நம்பியுள்ள காரணத்தால் விவசாயம் ஒரு சூதாட்டம் என்ற நிலையில் மக்கள் தங்கள் வாழ்க்கையை வறுமை நிலையோடு ஆடு,மாடு போன்ற கால்நடைகளை வளர்ப்பதற்கு கூட தண்ணீரில்லாமல் அவதிப்படுகின்றனர். தேர்தல் வாக்குறுதிப்படி தொகுயில் உள்ள 183 குளங்களுக்கும் காவிரி நீரை கொண்டு வந்து நிரப்புவதற்கான திட்டத்தை ஆய்வு செய்து அதற்கான திட்ட மதிப்பீடு 1000 கோடி அதற்கான திட்ட அறிக்கை தமிழக முதல்வரிடம் பட்ஜெட் தொடரில் அளிக்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கியவுடன் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் இத்திட்டத்தின் மூலம் 100மூ வறட்சியை தீர்க்கமுடியும். விவசாயத்தை நம்பி வாழும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஏனென்றால் இதே திட்டம் ஆந்திர மாநிலம் தும்கூர் மாவட்டம் சிரா சட்டமன்ற தொகுதியில் செயல் படுத்தப்பட்டு மிகவும் பின்தங்கி வறட்சிப் பகுதியாக இருந்த அத்தொகுதி இன்று விவசாயத்தில் ஒரு மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை நான் சில வருடங்களுக்கு முன்பு அங்கு சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது உணர முடிந்தது
எனவே தான் இந்த திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன.; இத்திட்டத்தின் மூலம் வேடசந்தூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும். மேலும் நான் 1993 இல் தமிழகத்தின் குடிநீர் வடிகால் வாரிய தலைவராக இருந்த போது வேடசந்தூர் தொகுதியில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக என்னுடைய முயற்சியால் கொண்டு வரப்பட்டது தான் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அன்று கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் வேடசந்தூர் தொகுதிமக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டுள்;ளது என்றால் அது மிகையல்ல மேலும் ஆரம்பத்தில் வேடசந்தூர் தொகுதிக்கு காவிரிக் குடிநீரை கொண்டு வரும் போது இரண்டு கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. தற்போது அதில் ஒரு கிணறு பழுதடைந்து விட்டது. எனவே மீண்டும் காவிரியில் புதியதாக இரண்டு கிணறுகள் அமைத்து பழுதடைந்த மோட்டார் மற்றும் குழாய்களை புதியதாக மாற்றவும் ரூ82 கோடி நிதி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியவுடன் அதற்கான பணிகள் உடனே தொடங்கப்படும். இத்திட்ட பணிகள் முடிந்து விட்டால் வேடசந்தூர் தொகுதிக்குள் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வசதி செய்து தரப்படும். எவ்வளவு வறட்சி நிலவினாலும் குடிநீர் பற்றாக்குறை என்பது எப்போதும் இருக்காது
மேலும் நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றத்திலிருந்து மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி சுகாதார வசதி போன்றவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றேன். அதையொட்டி சுகாதாரத் துறையின் மூலம் வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தரமேம்பாட்டிற்க்காக கட்டமைப்பு வசதிக்காகவும் ரூ5 கோடி மற்றும் வேடசந்தூர் தொகுதியில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கும் மேலே கூறிய காரணங்களுக்காக ரூ15 கோடி ஆக மொத்தம் 20 கோடி நிதி வேண்டி துணை இயக்குநர் நலப்பணிகள் மூலம் திட்ட அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டு அவர்மூலம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கியவுடன் பணிகள் தொடங்கப்படும் என்று எம்.எல்.ஏ காந்திராஜன் தெரிவித்தார்.
1993-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காந்திராஜன் தமிழகத்திலே இரண்டாவதாக வேடசந்தூர் தொகுதியில் அதிக ஓட்டுக்கள் பெற்ற எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, பாளையம் நகரச் செயலாளர் சம்பத், முன்னால் மாவட்ட துணைத் தலைவர் ஜுவா, முன்னால் எம்.எல்.ஏ கிருஷ்ணன், மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சக்திவேல் கருப்பையா, கதிரவன், ராஜமாணிக்கம் சிவபெருமான், மணிமாறன், தாமரைக் கண்ணன், நைனார் முகமது, பொன் சுப்ரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
23 May 2022எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தை பொறுத்தவரை எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் இடம் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது.