முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும்: ஜனாதிபதியை சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 20 ஜூன் 2022      இந்தியா
Ramnath 2022-06-20

Source: provided

புதுடெல்லி : அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

நேசனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காவல் துறையினர் மோசமாக நடந்து கொண்டதாக ஜனாதிபதியிடம் புகார் மனு அளித்தனர். 

ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகினற்ன. இதேபோல் நேசனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது, அமலாக்கத்துறைக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காவல் துறையினர் மோசமாக நடந்து கொண்டதாக புகார் மனு அளித்தனர். மேலும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து சரியான விளக்கம் இல்லை என்றும், அதனால் அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து