முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் அருகே புயலில் சிக்கி மூழ்கும் கப்பல் : ஊழியர்களை மீட்க போராடும் கடலோர காவல்படை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      உலகம்
Hong-Kong 2022 07 03

Source: provided

ஹாங்காங் : தென் சீனக்கடலில் இயக்கப்படும் என்ஜினீயரிங் கப்பல் ஒன்று, ஹாங்காங் அருகே புயலில் சிக்கி கவிழ்ந்துள்ளது. இதுவரை 3 ஊழியர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ஊழியர்களை கடலோர காவல் படையினர் மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சுமார் 30 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த அந்த கப்பல், ஹாங்காங்கின் தெற்கே 300 கி.மீ. தொலைவில் வெப்பமண்டல புயலில் சிக்கியது. இதனால் கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருக்கிறது.

தகவல் அறிந்த கடலோர காவல் படையின் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் சிக்கியிருந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுகின்றனர். காற்று வேகமாக வீசுவதால் மீட்பு பணி கடும் சவாலாக இருக்கிறது. 

நேற்று காலை வரை மூன்று நபர்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபடுவது தொடர்பான புகைப்படத்தை ஹாங்காங் அரசு வெளியிட்டுள்ளது.

இரண்டு பகுதிகளாக உடைந்து மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை கடுமையான அலை தாக்குவதும், ஒரு ஊழியர் மீட்பு ஹெலிகாப்டரில் ஏற்றுவதும் அந்த புகைப்படங்களில் உள்ளது. கப்பல் மூழ்கும் காட்சி மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து