முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் கைதான சஞ்சய் ராவத்துக்கு ஆக.8 வரை காவல் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      இந்தியா
sanjai-ravat-- 2022 08 04

Source: provided

மும்பை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதான சிவசேனை மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத்தை வரும் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்புத் திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், சஞ்சய் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகள் விசாரிக்கப்படுகின்றன.

இதுதொடர்பான வழக்கில் சஞ்சய் ராவத் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அதேசமயம், சஞ்சய் ராவத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை; அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, எம்.ஜி.தேஷ்பாண்டே, சஞ்சய் ராவத்தை காவலில் வைத்து விசாரிக்கப் போதுமான அடிப்படை இருப்பதாகக் கூறி, அவரை ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று காவல் முடியும் நிலையில், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று மேலும் 4 நாள்கள் சஞ்சய் ரௌத்தை காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தனால், வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து