முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை ; அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளின் அருகாமையிலேயே சிகிச்சை பெறுவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அற்புதமான திட்டம் தான் அம்மா மினி கிளினிக். இந்த திட்டம் மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றது. 

கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாத காலத்தில், தனியார் ஆஸ்பத்திரிகள் பல இயங்காத நேரத்தில், அரசு டாக்டர்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து கொரோனாவுக்கும் மற்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். அதே அரசு டாக்டர்கள் தான் இப்போதும் பணிபுரிகின்றனர் ஆனால் தற்போது, அரசு ஆஸ்பத்திரிகளுக்கே மக்கள் செல்ல அஞ்சும் நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து