முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் : முதல்வராக பதவியேற்ற பின் நிதிஷ் பேட்டி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
Nitish-Kumar 2022-08-09

Source: provided

பாட்னா : 2024 தேர்தல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்” என்று பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின்னர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 2024-ல் மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்த பின்னர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கைகோத்துள்ளார் நிதிஷ்குமார். நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார் நேற்று மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய நிதிஷ்குமார், "2014-ல் அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். 2024 தேர்தலிலும் அவர்கள் வெற்றி பெறுவார்களா? 2024 தேர்தல் பற்றி இனி அவர்தான் (பிரதமர் மோடி) கவலைப்பட வேண்டும்.

2024-ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். எனக்கு பிரதமர் வேட்பாளராக களம் இறங்கும் ஆசையில்லை. 2020 தேர்தலுக்கு பின்னர் நான் முதல்வராக கூட விரும்பவில்லை. கட்சியின் நிர்பந்தத்தால் முதல்வரானேன்" என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து