முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கிரீன் கார்டு வழங்கும் மசோதா தாக்கல்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      உலகம்
Green-card 2022--09-30

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கானோருக்கு கிரீன் கார்டு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வழங்கப்படும் ஆவணம் கிரீன் கார்டு என அழைக்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இது கிடைப்பதில் கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் எச்-1பி விசா மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்போர் கிரீன் கார்டு பெற ஏதுவான சட்ட மசோதாவை அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் அலெக்ஸ் பாடில்லா, எலிசபெத் வாரன், பென் ரே லுஜான், கொறடா டிக் டர்பின் ஆகியோர் கொண்டு வந்தனர். 

இதுபற்றி அலெக்ஸ் பாடில்லா கூறும்போது,  இந்த மசோதா லட்சக்கணக்கான புலம் பெயர்ந்தோர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். பல்லாண்டு காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து, வேலை செய்து, பங்களிப்பு செய்கிறவர்கள் நிச்சயம்ற எதிர்காலம் குறித்த அச்சம் இன்றி சுதந்திரமாக வாழ வழிபிறக்கும் என குறிப்பிட்டார். 

அமெரிக்காவில் தொடர்ந்து குறைந்தது 7 ஆண்டுகள் வசித்து வருபவர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா வை அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு கிரீன் கார்டு வழங்கப்படாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் லட்சோப லட்சம் குடியேறிகளின் வரவேற்பை பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து