முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலை - அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம்: அமைச்சர் பொன்முடி

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Ponmudi 2022 09 06

Source: provided

சென்னை : கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து  புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருப்பதாவது., பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் விவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து  புதிய பாடத்திட்டம்கொண்டுவரப்படும்.

அனைத்து பல்கலைகழகங்களிலும் ஒரே மாதிரியான மொழிப்பாடம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) கொண்டு வரப்படும். ஆராய்ச்சி படிப்பிற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஊழல் செய்கிறது என்ற எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ் மக்களுக்கு யார் ஊழல் செய்கிறார்கள் என்பது தெரியும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து