எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து கனிட்கர் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார்.
இந்தியாவுக்காக 2 டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தர போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் இவர் குவித்திருக்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் ரமேஷ் பவாரை நேஷனல் கிரிக்கெட் அகாடெமிக்கு பிசிசிஐ மாற்றம் செய்துள்ளது
---------------
வங்கதேச 'ஏ' அணிக்கு எதிராக முகேஷ் அபாரம்
இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில் 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரின் அபாரமான பந்துவீச்சில் வங்கதேச பேட்டர்கள் தடுமாறினார்கள். ஷஹாதத் ஹுசைன், ஜேக்கர் அலி மட்டும் நன்கு விளையாடி முறையே 80, 62 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேச ஏ அணி, 80.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்காலைச் சேர்ந்த 29 வயது முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
________________
ரமேஷ்பவார் பணியை மாற்றியது பி.சி.சி.ஐ.
2018 முதல் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார் ரமேஷ் பவார். எனினும் நடுவில் இரண்டரை வருடங்களுக்கு மற்றொரு முன்னாள் வீரரான டபிள்யூ.வி. ராமன் பயிற்சியாளராகப் பணியாற்றினார். இதன்பிறகு 2021 மே மாதம் முதல் இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் பவார் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரை, பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்கு பணி மாற்றம் செய்துள்ளது பிசிசிஐ. நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக ரமேஷ் பவார் பணியாற்றுவார் என அகாதெமியின் தலைவர் விவிஎஸ் லஷ்மன் கூறியுள்ளார். இந்திய அணிக்காக 2004 முதல் 2007 வரை 2 டெஸ்டுகள், 31 ஒருநாள் ஆட்டங்களில் ரமேஷ் பவார் விளையாடியுள்ளார்.
________________
மெதுவான பந்துவீச்சு: இந்திய அணிக்கு அபராதம்
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர். இதனால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 80 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.
______________ __
இந்தியா - பாக். போட்டி குறித்து முன்னாள் வீரர் அப்ரிடி கருத்து
இந்திய அணி ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று அக்டோபரில் ஷா ஒரு வெடிகுண்டு வீசினார்.பிசிசிஐ உறுதியாக இருந்தால், உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லாது என்று பாகிஸ்தான் எதிர்த்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக மிரட்டல் விடுத்தார்.
இரு வாரியங்களுக்கு இடையேயான சண்டைக்கு மத்தியில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை குறித்து அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ஷாகித் அப்ரிடி கூறும் போது கிரிக்கெட் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான உறவு எப்போதும் மேம்பட்டுள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியர்கள் பார்க்க விரும்புகிறார்கள்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2025.
03 Nov 2025 -
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
-
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
-
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
-
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
-
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
-
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
-
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
-
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
-
தமிழகத்தில் வெப்பநிலை உயரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
-
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
-
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்., இடம் பெற கார்த்தி சிதம்பரம் எம்.பி. விருப்பம்
03 Nov 2025மதுரை: அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
-
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
-
முதல் முறையாக உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசுத்தொகை
03 Nov 2025மும்பை: உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


