முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபரீதம்: ம.பி.யில் 2 போர் விமானங்கள் மோதிய விபத்தில் விமானி பலி : ராஜஸ்தானிலும் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      இந்தியா
Madhya-Pradesh 2023 01 28

Source: provided

மொரீனா : மத்தியப்பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 2 போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார். விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும் இன்னொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்பதும் பாதுகாப்பு படையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விமானங்களும் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ பகுதியில் மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளன. விபத்து நடந்த மொரீனா எனும் கிராம பகுதியில் நொறுங்கி விழுந்த விமான பாகங்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 2 போர் விமானங்களும் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதா இல்லை வேறு காரணங்களால் விபத்து நடந்ததா என்று விரைவாக விசாரிக்கடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகோய் 30 விமானத்தில் 2 விமானிகள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பாராசூட் மூலம் பத்திரமாக இறங்கியதாக தெரிகிறது. மற்றொரு விமானி தேடப்பட்ட நிலையில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மிராஜ் 2000 போர் விமானத்தில் இருந்த ஒருவரை மட்டும் தேடும் பணி நடப்பதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு இந்திய விமானப்படை தளபதி விளக்கமாக விவரித்துள்ளார்.

இதேபோல் ராஜஸ்தானின் பரத்பூரில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தின் விமானி தப்பியதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து