முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் வரும் 24 முதல் 26-ம் தேதி வரை காங். மாநாடு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் வரும் 24 முதல் 26-ம் தேதி வரை 3 நாள் காங்கிரஸ் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமைக்கு ஒப்புதல் அளிக்கவும், கட்சி தேர்தல்  தொடர்பாகவும், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக விவாதிக்கவும் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறும் என்று  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு இதுவாகும். இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், இமாச்சல் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இந்த மூன்று நாள் மெகா மாநாட்டில் பங்கேற்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து