முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க .ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் என்பவர் இன்று (5.2.2023) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு. அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக, நேற்று (4.2.2023) காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகில் டோக்கன் விநியோகித்தார். 

அதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியதால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி சண்முகம் என்பவரது மனைவி வள்ளியம்மாள்,  ஜெமினி என்பவரது மனைவி  ராஜாத்தி, சின்னத்தம்பி என்பவரது மனைவி நாகம்மாள் மற்றும் மணி என்பவரது மனைவி  மல்லிகா ஆகிய வயதான நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பெண்கள் வாணியம்பாடி அரசு அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமுற்று, மூச்சுத் திணறல் ஏற்பட்டு. மருத்துவமனையில் இந்த சம்பவத்திற்குக் சிசிக்சைக்காக காரணமான அய்யப்பன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று. நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா இரண்டு லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து. மூச்சுத் திணறல் ஏற்பட்டு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து