எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர முடியாது...
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடும் விமர்சனம்...
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவதூறு வழக்கு...
இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது விசாரணை நடைபெற்றது. 2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா அறிவித்திருந்தார்.
குற்றவாளி என தீர்ப்பு....
இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜராகினர். அனைத்துத் தரப்பினரும் ஆஜரான நிலையில் தீர்ப்பை வாசித்த மாஜிஸ்திரேட் வர்மா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
கடமையை மட்டுமே...
தொடர்ந்து மனுதாரர் புர்னேஷ் மோடி தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, “சட்டங்களை இயற்றும் மக்களவையின் எம்.பி.யாக ராகுல் காந்தி உள்ளார். அவருக்கு சட்ட விதிகள் அனைத்தும் தெரியும். அவரே விதிகளை மீறியுள்ளார். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்றார். ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடும்போது, “வழக்கில் மன்னிப்பு கோர விரும்பவில்லை. ராகுல் காந்தி ஊழலுக்கு எதிராகவே பேசினார். அவர் தனது கடமையை மட்டுமே செய்தார்” என்றனர்.
30 நாட்கள் ஜாமீன்....
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.
மேல்முறையீடு...
ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பாபு கூறும்போது, “இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நீதித் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார். ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், “எனது மதம் உண்மை, அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது கடவுள். அகிம்சை அதை அடையும் வழி. இது காந்தியடிகளின் பொன் மொழி” என்று தெரிவித்திருந்தார்.
எம்.பி. பதவி பறிப்பு...
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ''குற்றவியல் வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 102(1)(e)-ன் கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் எனும் நிலையில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுகிறார். அவரது தகுதி நீக்கம் தீர்ப்பு வெளியான நாளில் (23.03.2023) இருந்தே அமலுக்கு வந்துள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி தப்புமா..?
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிபோயுள்ளது. சூரத் நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையை ஒரு மாதத்துக்கு மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவரது தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நிரந்தரமாக பறிபோகுமா அல்லது தப்புமா என்பது தெரியவரும்.
போட்டியிட முடியாது...
இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, "ராகுல் வழக்கில், அவர் சுப்ரீம் கோர்ட் வரை மேல்முறையீடு செய்ய முடியும். ஒருவேளை சுப்ரீம் கோர்ட்டும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், கண்டிப்பாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். அவர் விடுதலையான நாள் முதல் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது" என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 2 days 12 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 6 days 11 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 2 days ago |
-
ஊழல் குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 வருட சிறை தண்டனை
02 Jun 2023பிரேசிலியா : பிரேசிலில் முன்னாள் அதிபர் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 02-06-2023.
02 Jun 2023 -
மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றி நீதியை பெற வேண்டும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விளக்கம்
02 Jun 2023புதுடெல்லி, "மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.
-
கோகுல்ராஜ் கொலை வழக்கு: இதுவரை கடந்து வந்த பாதை
02 Jun 2023சென்னை, பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்
-
ஐபோன்களில் ரகசிய மென்பொருள்: உளவு பார்த்ததாக அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டு
02 Jun 2023மாஸ்கோ : ஐபோன்களில் ரகசிய மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக அமெரிக்கா மீது ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
-
மத்திய அரசின் அவசரச் சட்ட விவகாரம்: ஜார்கண்ட் முதல்வரை சந்தித்து பேசினார் அரவிந்த் கெஜ்ரிவால்
02 Jun 2023ராஞ்சி : டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்ககோரி ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேற்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெ
-
மருத்துவமனையில் உள்ள மனைவியை காண சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் உத்தரவு
02 Jun 2023புதுடெல்லி, மருத்துவமனையில் உள்ள மனைவியை காண டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்
-
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. காட்டம்
02 Jun 2023மதுரை : மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
ஊதிய உயர்வு பெற தேர்வு அவசியமில்லை: பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
02 Jun 2023சென்னை, 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என அனுமதியளித்த சென்னை உயர் நீத
-
ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு எதிரொலி: கூடுதலாக 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழக போக்குவரத்துத் துறை அறிவிப்பு
02 Jun 2023சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவி
-
கோவாவின் முதல் வந்தே பாரத் ரயில்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
02 Jun 2023பானாஜி, கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
-
பதற்றம் தணிந்ததால் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தி அறிவிப்பு
02 Jun 2023இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக நடந்த பாலாபிஷேகம்
02 Jun 2023மதுரை : வைகாசி விசாகத்தையொட்டி நேற்று திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது.
-
கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
02 Jun 2023சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
புதுச்சேரியில் திருமண தாம்பூலத்தில் மதுபாட்டில்: மணமகன் வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது காவல்துறை
02 Jun 2023புதுச்சேரி, புதுச்சேரியில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் மதுபாட்டில் போட்டுக் கொடுத்த திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது புதுச்சேரி காவல்து
-
பூமியின் மேற்பரப்பில் இருந்து 32,000 அடி வரை துளையிடும் பணியை தொடங்கிய சீனா
02 Jun 2023பெய்ஜிங் : பூமியின் மேற்பரப்பில் இருந்து 10,000 மீட்டர் (32,808 அடி) வரை துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.
-
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை நமக்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
02 Jun 2023புதுடெல்லி, சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் நமக்கு உத்வேகத்தை அளிக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
02 Jun 2023சென்னை : ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
-
கரூரில் 8-வது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை
02 Jun 2023கரூர் : கரூரில் நேற்று 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி : கோபால கிருஷ்ண காந்தி புகழாரம்
02 Jun 2023சென்னை : நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி என்று மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னால் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் கைது: 3 பேர் மீது வழக்குப் பதிவு
02 Jun 2023சேலம், சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்துக்கு காரணமான 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள இரும்பாலை காவல்துற
-
தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் தாக்கம் உயரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
02 Jun 2023சென்னை, தமிழகம், புதுச்சேரியில் 2 நாள்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
-
தமிழகத்தில் முருகன் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : பால்குடம் சுமந்து வந்து பக்தர்கள் அபிஷேகம்
02 Jun 2023சென்னை : அறுபடை வீடுகளிலும் முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
-
பட்டாசு ஆலைகளை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கனும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 Jun 2023சென்னை, தமிழகத்தில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்ற நிலையில் பட்டாசு ஆலைகளை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதி
-
ஒடிசாவில் விபத்துகுள்ளானது கோரமண்டல் விரைவு ரெயில் : மீட்பு பணிகள் தீவிரம்
02 Jun 2023புவனேஷ்வர் : சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதை அடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.