முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாஸ்போர்ட் விவகாரம்: ராகுல் காந்தி வழக்கு நாளை விசாரணை

புதன்கிழமை, 24 மே 2023      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

புதுடெல்லி, புதிய பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பான ராகுல் காந்தி வழக்கு நாளை விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜதந்திர பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ள அவர் புதிதாக சாதாரண பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு நேற்று விசாரணை நடைபெறும் என்று தெரிவித்து இருந்தது. ராகுல் காந்தியின் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறும் என்று கோர்ட் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து