எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோவில் திருவிழாக்களின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இதனை சுட்டிக்காட்டி அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-
ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி கோவில் விழா குழுவால் மனு அளிக்கப்பட்டால் அதன் மீதான முடிவு 7 நாட்களுக்குள் விழாவுக்குழுவுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அப்படி 7 நாட்களில் அனுமதி வழங்கவோ, அனுமதி மறுக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் 8-ம் நாள் விழாக்குழு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம்.
விழாக் குழுவின் பொறுப்பான உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பாளர்கள், திருவிழாவிற்கு சம்பந்தப்பட்ட கலாசார நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுவதையும், ஆபாசமான காட்சிகள் நடனம் எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது.
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண் கலைஞர்களின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் இழுக்கு ஏற்படும் வகையில் அவர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்கவோ, வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்தவோ கூடாது. கோவில்களில் இறை வழிபாட்டிற்காக இசைக்கப்படும் பாடல்கள் அல்லது இரட்டை அர்த்தப் பாடல்கள் இது போன்ற நிகழ்ச்சியில் இடம்பெறக் கூடாது.
ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மது அல்லது போதைப்பொருள் எதுவும் விநியோகிக்கப்படக் கூடாது. நிபந்தனைகள் ஏதேனும் மீறப்பட்டால், நிகழ்ச்சி அமைப்பாளர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் அவர்கள் மேல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
இந்த வழிகாட்டுதல்கள் குறித்து அந்தந்த மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் தங்களின் கீழ் உள்ள போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரிய 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கி, விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அந்த உத்தரவில் கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார் - ஓ. பன்னீர்செல்வம் அதிரடி
13 Feb 2025தேனி, எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார் என்று முன்னால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை மையம் தகவல்
13 Feb 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
13 Feb 2025சென்னை; பல மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து தி.மு.க. தலைமையகம் அறிவித்துள்ளது.
-
காசா மீது மீண்டும் தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
13 Feb 2025டெல் அவிவ்: பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்கு ஹமாஸ் விடுவிக்காவிட்டால் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கும் என்று அதன் பிரதமர் பெஞ்சமின் நென்யாகு எச்
-
அ.தி.மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்த முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
13 Feb 2025சென்னை: அ.தி.மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விடமுடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈரான் அணு ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
13 Feb 2025வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணு ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
-
பெண் காவலர் பாலியல் புகார்: ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்
13 Feb 2025சென்னை: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் மகேஷ் குமார் (ஐ.பி.எஸ். அதிகாரி) சஸ்பெண்ட
-
தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும் புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
13 Feb 2025புதுடில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்
-
காதலர் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரம்
13 Feb 2025சென்னை, காதலர் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தாண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை: பூந்தமல்லி - போரூர் இடையே சுரங்கம் தோண்டும் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் தகவல்
13 Feb 2025சென்னை, இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்,
-
மகா கும்பமேளாவில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்
13 Feb 2025லக்னோ, மகா கும்பமேளாவில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
-
புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
13 Feb 2025பெங்களூரு, புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
13 Feb 2025நைபிடா, மியான்மர் நாட்டில், இந்தியாவின் மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் நேற்று மதியம் 12.35மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
-
அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
13 Feb 2025சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லைக்கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
-
வட்டமலைக்கரை ஓடையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
13 Feb 2025சென்னை, வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை: ட்ரம்ப், புதின் ஒப்புதல் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடங்க அமெரிக்கா - ரஷ்யா ஒப்புதல்
13 Feb 2025வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும், மிக நெருக்கமாக இணைந்து செயல்படவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
-
3-வது ஒருநாள் போட்டியில் இரு அணி வீரர்கள் பச்சை நிற பட்டையுடன் விளையாடியது ஏன்?
13 Feb 2025அகமதாபாத், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் வகையில் 3-வது ஒருநாள் போட்டியில் இரு அணி வீரர்களும் களம் இறங்கியபோது கையில் பச்சை நிற பட்டை அணிந்திருந்த தகவல் வெளிய
-
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம்: பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் ஆலோசனை?
13 Feb 2025வாஷிங்டன் டி.சி., இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை தொடங்கும் திட்டம் பற்றி பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் பேசக்கூடும் என கூறப்படுக
-
பாராளுமன்ற வளாகத்தில் காங். எம்.பி.க்கள் போராட்டம்
13 Feb 2025புதுடெல்லி, கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளை சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட க
-
காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் கடவுள் சத்தியமானவர் என்று முழுங்கிய தாய்
13 Feb 2025ராஞ்சி, காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
-
பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சிக்கு ஆபத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
13 Feb 2025சென்னை: பா.ஜ.க. ஆட்சியின் கீழ் இந்தியாவின் கூட்டாட்சி முறை ஆபத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு
13 Feb 2025மதுரை, அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
-
ஜார்கண்ட்: வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் பலி போலீசார் விசாரணை
13 Feb 2025ராஞ்சி, ஜார்கண்ட்டில் வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் உயிரிழந்தார் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
1961-ம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
13 Feb 2025புதுடில்லி, மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
-
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
13 Feb 2025வாஷிங்டன்: பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.