எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை நேற்று ஐசிசி வெளியிட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த பாடல் தற்போது வெளியானது. இந்த பாடலுக்கு 'தில் ஜாஷ்ன் போலே' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார். இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
______________
நியூசி. வீரர் டிம் செளதி விலகல்?
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), பிசிசிஐ இணைந்து 50 ஓவா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் வரும் அக். 5 முதல் நவ. 19-ஆம் தேதி வரை நடத்துகின்றன. அக். 5-ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதுகின்றன.இந்த தொடருக்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 போ் கொண்ட நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதியும் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய நியூசிலாந்தின் டிம் செளதிக்கு வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி, டிம் செளதியின் வலது கட்டை விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அடுத்த வாரத்தில் உலகக் கோப்பை அணியில் டிம் செளதி இடம்பெறுவாரா, மாட்டாரா என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
______________
ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்த ரஜினி
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் சந்திக்கிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கவுரவித்தார். இந்நிலையில், ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்து ரஜினி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ-யிடம் இருந்து பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஜெய்ஷா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
______________
அணியில் அஸ்வின் ? அகர்க்கர் பதில்
எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மாற்றாக அஸ்வின் இடம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் அது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அகர்க்கர் பதில் அளித்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் காயமடைந்தார். இறுதிப் போட்டியில் அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் களம் கண்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இருவரும் உள்ளனர்.
“அக்சர் படேலுக்கு ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து அவர் விரைந்து குணம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இடைப்பட்ட நேரத்தில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தரை ஆஸ்திரேலிய தொடருக்காக தேர்வு செய்துள்ளோம். இந்த தொடரில் அவர்களின் செயல்பாட்டை கருத்தில் கொள்வோம். இறுதி முடிவு அக்சரின் காயத்தை பொறுத்து சரியான நேரத்தில் எடுக்கப்படும். அவர் ஃபிட்டாக இருப்பார் என நம்புகிறோம். அப்படி இல்லாமல் மாற்று தேவை இருந்தால் அந்த வழியை பின்பற்றுவோம்” என அகர்க்கர் தெரிவித்துள்ளார்.______________
சாஹல் மனைவி குறித்து நெகிழ்ச்சி
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹலை எடுக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சாஹல் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங் ஆட தெரிந்த சுழற்பந்து வீச்சாளர் தேவை என்பதால் சாஹல் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். இந்நிலையில் உலகக்கோப்பையில் கலந்து கொள்ள சாஹலுக்கு கிடைக்காத வாய்ப்பு அவரது மனைவி தனஸ்ரீ வர்மாக்கு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை ஐசிசி வெளியிடவுள்ளது. இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு 'தில் ஜாஷ்ன் போலே' என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சிறந்த நடனக்கலைஞரான தனஸ்ரீ வர்மா உலகக்கோப்பை தொடருக்காக ஐசிசி வெளியிடும் பாடலில் ரன்வீர் சிங்குடன் நடனம் ஆடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனஸ்ரீ வர்மா பிரபல யூடியூபர் ஆவார். சிறந்த நடன கலைஞரான அவர் நடனம் கற்றுக் கொடுத்தும் வருகிறார். தனது யூடியூப் சேனலில் நடனம் ஆடி அதை வீடியோவாக பகிர்ந்து வருகிறார். சாஹலை திருமணம் செய்யும் முன்பு இருந்தே அவர் வட இந்திய அளவில் யூடியூபில் பிரபலமானவராக இருந்தார். சுமார் 55 லட்சம் பேர் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மில்க் பால்![]() 1 day 12 hours ago |
தக்காளி சாஸ்![]() 4 days 15 hours ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 1 week 1 day ago |
-
சீரியல் நடிகையை கரம்பிடித்த ஜெயிலர் பட நடிகர் கிங்ஸ்லி
10 Dec 2023சென்னை : ஜெயிலர் படத்தில் நடித்த பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதா பாரிஸ் ஜெயராஜை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
-
அடுத்த புதிய முதல்வரை தேர்வு செய்ய ம.பி.யில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
10 Dec 2023போபால் : மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
-
நிவாரண பொருட்களை கொள்ளை அடிக்கும் ஹமாஸ் அமைப்பினர் : வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல்
10 Dec 2023ஜெருசலேம் : காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குற்ற
-
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகை : 4 மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
10 Dec 2023சென்னை : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று சென்னை வருகிறது.
-
அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு
10 Dec 2023சென்னை : 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
200-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழகம் முழுவதும் நடந்த போலீஸ் எழுத்து தேர்வு
10 Dec 2023சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று 200-க்கும் மேற்பட்ட மையங்களில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது.
-
தமிழகத்தில் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Dec 2023சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரு வார விடுமுறைக்கு பிறகு 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு
10 Dec 2023சென்னை : ஒரு வார விடுமுறைக்கு பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளன.
-
சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த சிறுமி உயிரிழப்பு
10 Dec 2023சென்னை : சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு
10 Dec 2023சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
மிக்ஜாம் புயல்: தெற்கு ரெயில்வேக்கு 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு : பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
10 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக தெற்கு ரயில்வேக்கு ரூ. 35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
-
எல்லை தாண்டியதாக கூறி 25 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
10 Dec 2023நாகப்பட்டினம் : எல்லை தாண்டியதாக கூறி நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்த
-
ஒரே பந்தில் 7 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா
10 Dec 2023கான்பெரா : பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியின் வீரர் மேட் ரென்ஷா ஒரே பந்தில் 7 ரன்கள் சேர்த்து அரை சதத்தை கடந்தார்.
-
ஒருவர் கூட விட்டுப் போகாத வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் உறுதி
10 Dec 2023சென்னை : சென்னை, காஞ்சிபு ரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருவர் கூட விட்டுப்போகாத வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அமை
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: சிரியாவில் 7 வீரர்கள் பலி
10 Dec 2023டமாஸ்கஸ் : சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் கட்டாயம்: அமைச்சர்கள் புதிய கார் வாங்க தடை: மிசோரம் முதல்வர் உத்தரவு
10 Dec 2023அய்சால் : அரசு ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய இனி அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை கட்டாயப்படுத்தப்படும்.
-
மிக்ஜம் புயல்: மக்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை : அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்
10 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக மக்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்
-
370-வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: இன்று தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்
10 Dec 2023புதுடெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க.
-
ராஜாஜியின் பிறந்த நாள்: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
10 Dec 2023சென்னை : மூதறிஞர் ராஜாஜியின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது : கேரள பகுதிக்கு முதற்கட்ட எச்சரிக்கை
10 Dec 2023தேனி : முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டியதை தொடர்ந்து கேரள பகுதிக்கு முதல்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவ மழை: சென்னையில் இயல்பை விட 48 சதவீதம் அதிகம்
10 Dec 2023சென்னை : வடகிழக்கு பருவ மழையின் மூலம் சென்னையில் இயல்பை விட 48 சதவீதம் அதிகமாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அரசியல் வாரிசாக சகோதரர் மகனை அறிவித்தார் மாயாவதி
10 Dec 2023லக்னோ : பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார்.
-
மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்திரசேகரராவிடம் நலம் விசாரித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
10 Dec 2023ஐதராபாத் : தெலுங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகரராவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
-
அண்டை நாடுகள் குறித்து நவாஸ் ஷரீப் கருத்து
10 Dec 2023இஸ்லாமாபாத் : எனது ஆட்சி காலத்தில்தான் இந்திய பிரதமர்களான வாஜ்பாய்(1999), நரேந்திர மோடி(2015) ஆகியோர் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர் என அண்டை நாடுகள் குறித்து பாகிஸ்தான்
-
சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் நீட்டிப்பு
10 Dec 2023சபரிமலை : பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் சாமி தரிசன நேரம் இன்று (11.12.2023) முதல் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.