எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலாலம்பூர் : இஸ்லாமிய மதச் சட்டமான ஷரியத்தை அடிப்படையாகக் கொண்டு மலேசியாவின் கெலன்டான் மாகாண அரசு இயற்றிய 16 சட்டங்களை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செல்லாதவையாக அறிவித்துள்ளது.
மத்தியில் எதிா்க்கட்சியாக இருந்து வரும் பெரிக்காத்தான் கட்சி, கெலன்டான் மாகாணத்தில் ஆட்சி செலுத்தி வருகிறது. அந்த மாகாண அரசு, பாலியல் குற்றங்கள், பாலினம் மாறி உடை அணிதல், போலி சாட்சியம் அளித்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு ஷரியா அடிப்படையில் தண்டனை வழங்கும் புதிய சட்டங்களை இயற்றியது.
கடந்த 2020-ல், மலேசியாவின் வடகிழக்கில் உள்ள கெலன்டான் பகுதியிலிருந்து 2 இஸ்லாமிய பெண்கள், ஷரியத் அடிப்படையில் உருவாகியிருந்த சில சட்டங்களுக்கும், அவற்றிற்கான தண்டனைகளுக்கும் எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கில், கடந்த இரு தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் ஷரியத் அடிப்படையில் இருந்த கிரிமினல் சட்டங்களை நீக்கி விட்டது. இது தொடர்பான விசாரணையில் 9 பேர் கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பில், 8-1 எனும் எண்ணிக்கையில், ஷரியத் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த 16 சட்டங்களை நீக்கி விட்டது.
இவற்றில் சில பாலியல் குற்றங்கள், குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் பாலியல் தாக்குதல்கள், பொய் சாட்சி கூறுதல், மத வழிபாட்டு தலங்களை அவமதித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கான சட்டங்கள் அடங்கும்.மலேசியாவின் மத்திய சட்டத்தில் இவை முன்னரே அடங்கும் என்பதால், தனியாக ஷரியத் சட்டத்தின்படி இவை தேவையில்லை என தீர்ப்பாகி உள்ளது.
மலேசியாவில் இரட்டை சட்ட முறை கடைபிடிக்கப்படுகிறது. தனி நபர் மற்றும் குடும்பங்கள் சார்ந்த சிக்கல்களுக்கு ஷரியத் சட்டமும், பிற விஷயங்களுக்கு பொது சட்டமும் உள்ளது.
மலேசியாவின் 33 மில்லியன் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பூர்வீக மலேய மக்கள். இவர்கள் இஸ்லாமியர்களாகவும், இவர்களை தவிர சீனர்களும், இந்தியர்களும் மக்கள் தொகையில் உள்ளனர்.
தனது மகளுடன் இணைந்து இவ்வழக்கை தாக்கல் செய்த நிக் எலின் நிக் அப்துல் ரஷீத் எனும் வழக்கறிஞர், மலேசிய அரசியலமைப்பு சட்டம்தான் உயர்ந்தது என இத்தீர்ப்பில் தெளிவாகி உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில் 2022 பொது தேர்தலில் வென்ற பிரதமர் அன்வர் இப்ராகிம், இந்த தீர்ப்பினால் அரசியல் ரீதியாக விளையும் மாற்றங்களை சந்திப்பது சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 5 days ago |
-
3 போட்டிகள் கொண்ட தொடர்: இந்தியா - வங்காளதேசம் இன்று முதல் டி-20 போட்டியில் மோதல்
05 Oct 2024குவாலியர் : சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா?
-
சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு 65 சதவீத நிதி வழங்க முடிவு: மத்திய அரசு அறிவிப்பு
05 Oct 2024டெல்லி, சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் நடந்தது: அரியானா சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
05 Oct 2024சண்டிகார், அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று 90 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்குப்பதிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
05 Oct 2024புதுடெல்லி : தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Oct 2024சென்னை : தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Oct 2024சென்னை : தங்கம் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
-
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
05 Oct 2024சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை
-
மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி : சிறப்பு பேருந்துகள் இயக்கம்
05 Oct 2024சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்: டிரம்ப் பேச்சு
05 Oct 2024நியூயார்க் : ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகாவில் மைசூரு, குடகு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
05 Oct 2024பெங்களூர் : கர்நாடகாவில் மைசூரு, குடகு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பினார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
05 Oct 2024நாகை : முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் சென்ற கார் நேற்று இ.சி.ஆர். சாலையில் உள்ள கோயில் மதில் சுவற்றில் மோதியது.
-
இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு
05 Oct 2024வாஷிம் : இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டியுள்ளார்.
-
மராட்டியத்தில் ரூ.23,300 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
05 Oct 2024மும்பை : மராட்டிய மாநிலத்தில் ரூ. 23,300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு
05 Oct 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
லெபனானில் இருந்து 97 பேரை விமானம் மூலம் மீட்ட தென் கொரியா
05 Oct 2024சியோல் : லெபனானில் பதற்றம் நிலவி வரும் சூழலில் 97 பேரை விமானம் மூலம் மீட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
-
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கைது
05 Oct 2024சென்னை : சென்னையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
5.24 மில்லியன் டாலர் அபராதத் தொகையை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய டுவிட்டர் நிறுவனம்
05 Oct 2024பிரேசிலியா : கோர்ட் உத்தரவுப்படி, 5.24 மில்லியன் டாலர் அபராத தொகையை செலுத்திய டுவிட்டர் நிறுவனம், அதனை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய விவரம் வெளியாகி உள்ளது.
-
தொழில்நுட்பக் கோளாறால் விமான சேவைகள் பாதிப்பு : இண்டிகோ நிறுவனம் விளக்கம்
05 Oct 2024புதுடெல்லி : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களது விமான நிலைய குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இண்டிகோ விளக்கம்
-
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: 15-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
05 Oct 2024புதுடெல்லி : வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்க
-
எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாள்: ராகுல் காந்திக்கு காங். தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து
05 Oct 2024சென்னை : நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார
-
தமிழகத்தின் வட பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு: வடகிழக்கு பருவமழை 15-ம் தேதி தொடக்கம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Oct 2024புதுடெல்லி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மைசூரில் இளைஞர் தசரா விழா இன்று தொடக்கம் : பாதுகாப்பு பணியில் 1,239 போலீசார்
05 Oct 2024மைசூரு : மைசூரில் இளைஞர் தசரா இன்று துவங்குகிறது. பாதுகாப்புக்காக 1,239 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
-
தொடரும் போராட்டம்: சாம்சங் தொழிலாளர்கள், நிறுவனத்துடன் 3 தமிழக அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை
05 Oct 2024சென்னை, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து நாளை 3 தமிழக அமைச்சர்கள் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்
-
டிசம்பரில் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்
05 Oct 2024புதுடெல்லி : சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது.
-
மோசடி வழக்கில் கைதானவருக்கு த.வெ.க. கட்சியுடன் தொடர்பா? - கரூர் மாவட்ட தலைவர் விளக்கம்
05 Oct 2024கரூர் : மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.