முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் இந்திய மாணவி விபத்தில் பலி

திங்கட்கிழமை, 25 மார்ச் 2024      உலகம்
Accident-1

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் இந்திய மாணவி விபத்தில் பலியான நிகழ்வு அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லண்டன் பொருளாதார கல்வி மையத்தில் பிஎச்.டி. படிப்பை படித்து வந்தவர் சேஸ்த கோச்சார் (வயது 33). அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவரான கோச்சார், டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து விட்டு, அமெரிக்காவின் பென்சில்வேனியா மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களிலும் படித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, லண்டனில் படித்து வந்த அவர், சைக்கிளில் கடந்த வாரம் தன்னுடைய வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவர் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்து உள்ளார். அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கணவர் பிரசாந்த் உடனடியாக அவரை மீட்க சென்றார். ஆனால், அதில் பலனில்லை. கோச்சார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த் இந்த தகவலை ஆன்லைனில் பகிர்ந்திருக்கிறார். அதில், தைரியம் மற்றும் திறமை வாய்ந்த கோச்சார் மிக இளம் வயதில் உலகை விட்டு சென்று விட்டார். அவருக்கு இரங்கல்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து