முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதன்கிழமை, 27 மார்ச் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்கிடையே, ஒரு சில மாநிலங்களில் இதைத்தேர்தல்களும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.இந்நிலையில், அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் (நாக்பூர் பெஞ்ச்) வழிகாட்டுதலின்படி, மராட்டியத்தின் 30-அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து