முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம் என்ற புதிய பிரச்சாரம்: மனைவி சுனிதா தொடங்கினார்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      இந்தியா
Kejrival 2024-01-05

புது டெல்லி, கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம் என்ற புதிய பிரச்சாரத்தை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி கைது செய்தனர்.  அதை தொடர்ந்து வரும் 1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்குமாறு அவரது மனைவி கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம் என்ற புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளார். கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு 3-வது முறையாக காணொலியில் உரையாற்றிய  கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறியதாவது, 

என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர். நாட்டில் உள்ள மிகவும் ஊழல் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்கு சவால் விடுத்துள்ளார். மக்கள் தங்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அவரை ஆதரிக்க வேண்டும். 

தனது தரப்பு வாதங்களை கோர்ட்டில் துணிச்சலாக எடுத்து வைத்தவர். 8297324624 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கெஜ்ரிவாலுக்காக மக்கள் ஆசீர்வாதங்கள், பிரார்த்தனைகள் அல்லது வேறு ஏதேனும் செய்திகளை அனுப்பலாம், அதை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருகிணைப்பாளர் அவருக்கு தெரிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து