முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் காவல் நிலையம் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல்: 7 பேர் கைது

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      இந்தியா
Jail

Source: provided

 

காக்சிங்: மணிப்பூரில் காவல்  நிலையம் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 7 பேரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர்.

வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.  இதனால், சற்று பதற்றம் தணிந்தது.

இந்நிலையில், பல மாதங்களுக்கு பின்னர் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கடந்த 16-ம் தேதி கலவரம் வெடித்தது.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர். 

இதில், முதல்வர் பைரன் சிங்கின் வீட்டை கும்பல் ஒன்று முற்றுகையிட முயற்சித்தது. இதுதவிர, 3 மந்திரிகள் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களின் வீடுகளையும் அந்த கும்பல் தாக்கியது. அவர்களின் சொத்துகளையும் சூறையாடியது. 

இதன் தொடர்ச்சியாக, இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு, பிஷ்ணுப்பூர், தவுபால் மற்றும் காக்சிங் உள்பட 7 மாவட்டங்களில் இணையதள சேவையை மணிப்பூர் அரசு சஸ்பெண்டு செய்தது.

வீடுகளை முற்றுகையிட்டு, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த மொத்தம் 32 பேரை இதுவரை பல்வேறு காலகட்டங்களில், மணிப்பூர் போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அடுத்த உத்தரவு வரும் வரை இம்பால் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக உடனடியாக, 2 நாட்களுக்கு இணையதளம் மற்றும் மொபைல் வழியேயான இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. இதனால், மீண்டும் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

இந்நிலையில், மணிப்பூரின் காக்சிங் நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் மீது திடீரென சிலர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த சம்பவத்தில், 2 அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

இதனை மணிப்பூர் போலீசார் டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்து உள்ளனர்.  எம்.எல்.ஏ.வின் வீடு உள்ளிட்ட சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேரை விடுவிக்க கோரி இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி, 7 பேரை கைது செய்துள்ளனர்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து